சங்கர ராமேசுவரர் கோவிலில் பழமை வாய்ந்த 13 ஓலைச்சுவடிக் கட்டுகள் கண்டெடுப்பு

சங்கர ராமேசுவரர் கோவிலில் பழமை வாய்ந்த 13 ஓலைச்சுவடிக் கட்டுகள் கண்டெடுப்பு

1 mins read
5aac5865-fa6e-43f1-b246-73477a1a4add
-

தூத்­துக்­குடி: கடந்த இரு நாள்­களாக நடை­பெற்ற ஆய்­வின்­போது தூத்­துக்­கு­டி­யில் உள்ள சங்­கர ராமே­சு­வ­ரர் கோவி­லில் பழமை வாய்ந்த 13 ஓலைச்­சு­வடி கட்­டு­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன.

தமி­ழ­கத்­தில் உள்ள 195 கோவில்­களில் இது­வரை கள ஆய்வு செய்து, 176,149 சுருணை ஏடு­க­ளை­யும் 335 இலக்­கி­யச் சுவடி­க­ளை­யும் 26 செப்­புப் பட்­ட­யங்­க­ளை­யும் கண்டுபிடித்­துள்­ள­தாக ஓலைச்­சு­வடி பரா­ம­ரிப்பு, பாது­காப்பு, நூலாக்­கத் திட்டப் பணிக் குழு­வின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரும் சுவ­டி­யி­யல் அறி­ஞ­ரு­மான சு.தாம­ரைப்­பாண்­டி­யன் தெரி­வித்­தார்.

"தற்­போது கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்ள 13 ஓலைச்­சு­வடி கட்­டு­களில், ஏழு திரு­மு­றை­களும் காரைக்­கால் அம்­மை­யார் இயற்­றிய திருப்­ப­தி­கங்­களும் காணப்­படு­கின்­றன. மேலும், இந்த ஓலைச்­சு­வ­டி­க­ளைப் பிரதி எடுத்த­வர் நம்­பிக்­கு­றிச்சி எனும் ஊரைச் சேர்ந்த மாசி­லா­மணி என்ற குறிப்பும் உள்­ளது.

"சேக்­கி­ழார் இயற்­றிய 'பெரி­ய­பு­ரா­ணம்' எனும் நூல் அடங்­கிய ஒரு சுவ­டிப் பிர­தி­யும் இருந்­தது. இந்­தச் சுவ­டி­யைப் பிரதி எடுத்தவர் கொட்­டா­ரக்­கு­றிச்­சி­யைச் சேர்ந்த ஆ.வைகுண்­டம் பிள்ளை என்ற குறிப்பு சுவ­டி­யில் காணப்­பட்­டது," என்று சு.தாம­ரைப்­பாண்டி­யன் கூறி­னார்.

மாணிக்­க­வா­ச­கர் இயற்­றிய எட்­டாம் திரு­முறை என்று அழைக்­கப்­படும் திரு­வா­ச­கம், திருக்­கோவை நானூறு, அகத்­தி­யர் தேவா­ரத் திரட்டு, திரு­வா­ச­கம், திரு­வி­சைப்பா உள்­ளிட்ட மேலும் பல்­வேறு நூல்­கள் அடங்­கிய ஓலைச் சுவ­டி­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

13 சுவ­டிக்­கட்­டு­களில் உள்ள 3,127 ஏடு­க­ளைப் பரா­ம­ரித்து பாது­காக்­கும் பணி­யோடு, அவற்றை அட்­ட­வ­ணைப்­ப­டுத்­தும் பணி­யும் தற்­போது நடை­பெற்று வரு­வ­தாக அவர் தெரி­வித்­துள்­ளார்.

இத­னி­டையே, கீழக்­கரை அருகே 200 ஆண்­டு­கள் பழமை வாய்ந்த ஆங்­கி­லே­யர் கால நாண­யங்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன.