தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைச்சர்: இலங்கை, தமிழகம் இடையே பயணிகள் கப்பல் இயக்க நடவடிக்கை

1 mins read

சென்னை: இலங்கை, தமி­ழ­கம் இடையே பய­ணி­கள் கப்­பலை இயக்க நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும் என நெடுஞ்­சாலைத்­துறை அமைச்­சர் வேலு தெரி­வித்­துள்­ளார்.

சட்­டப்­பே­ர­வை­யில் நடை­பெ­ற்று வரும் மானிய கோரிக்­கை­கள் மீதான விவா­தத்­தின்­போதே அவர் இத்­த­க­வலை வெளி­யிட்­டார்.

"இந்­தியா, இலங்கை இடையே குறைந்த தூரப் பய­ணி­கள் கப்­பல் போக்­கு­வ­ரத்தை தொடங்­கு­வது என முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

"அதன்­படி, ராமே­சு­வ­ரத்­தில் இருந்து இலங்­கை­யின் தலை­மன்­னார், காங்­கேஸ்­வ­ரத்­துறை ஆகிய இரு பகு­தி­க­ளுக்கு பய­ணி­க­ளுக்­கான கப்­பல் போக்­கு­வ­ரத்தை தொடங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என்­று அமைச்­சர் வேலு தெரிவித்தார்.

ராமே­சு­வ­ரத்­தில் இருந்து சுமார் ஐம்­பது கிலோ­ மீட்­டர் தூரத்­தில் உள்­ளது தலை­மன்­னார். ராமே­சு­வரத்­துக்­கும் காங்­கே­சன்­து­றைக்­கும் இடை­யே­யான தூரம் நூறு கிலோ மீட்­டர் ஆகும்.

"பய­ணி­கள் கப்­பல் போக்­கு­வரத்தை தொடங்­கும் திட்­டத்தை அடுத்து சிறு துறை­முகப் பகு­தி­யில் கப்­ப­ல­ணை­யும் மேடை, பயணி­கள் தங்­கு­மி­டம், சுங்­கச் சோதனை மையங்­கள் ஆகி­யவை அமைக்­கப்­படும் என்று குறிப்­பிட்ட அமைச்­சர், இதற்­காக தனி திட்ட அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டு மத்­திய அர­சின் ஒப்­பு­த­லுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது என்­றார்.