பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா பேராசிரியர் கைது

பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா பேராசிரியர் கைது

2 mins read

குற்றச்சாட்டுக்கு ஆளான நான்கு பேரையும் பணி நீக்கம் செய்தது நிர்வாகம்

சென்னை: பாலி­யல் தொல்லை கொடுத்த புகா­ரின் பேரில் கலா­ஷேத்ரா கல்­லூ­ரி­யில் பேரா­சி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றும் ஹரி பத்­மனை சென்னை காவல்­துறை கைது செய்­துள்­ளது.

அவ­ரி­டம் விரி­வான விசா­ரணை நடத்­தப்­படும் என்று காவல்­துறை தெரி­வித்­துள்ள நிலை­யில், கலா­ஷேத்ரா கல்­லூரி இயக்­கு­நர் ரேவதி ராமச்­சந்­தி­ரன் மாநில மகளிர் ஆணை­யத்­தில் நேரில் முன்­னி­லை­யாகி விளக்­கம் அளித்­தார்.

பாலி­யல் தொல்லை புகார் தொடர்­பாக ஹரி பத்­ம­னி­டம் விசா­ரணை நடத்த காவல்­துறை திட்­ட­மிட்­டி­ருந்த நிலை­யில், ஹைத­ரா­பாத் சென்­றி­ருந்த அவர் திடீ­ரென தலை­ம­றை­வா­கி­விட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. அவ­ரைத் தேடிக் கண்­டு­பி­டிக்க தனிப்­ப­டை­யி­னர் ஹைத­ரா­பாத் சென்­றி­ருப்­ப­தா­க­வும் தக­வல் வெளி­யா­னது. இந்­நி­லை­யில், சென்னை வந்த பேரா­சி­ரி­யர் ஹரி பத்­மனை காவல்­துறை நேற்று காலை கைது செய்­தது.

அவ­ரி­டம் பல்­வேறு கோணங்­களில் விசா­ரணை நடத்தப்படும் என்று தெரி­வித்­துள்ள காவல்­துறை அதி­கா­ரி­கள், ஹரி பத்­ம­னின் கைப்பே­சியை இணை­யக்­குற்­றத் தடுப்­புப் பிரிவு ஆய்­வ­கத்­துக்கு அனுப்ப உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

கைப்­பேசி மூலம் அவர் எத்­தனை மாண­வி­களைத் தொடர்பு கொண்டு பேசி­யுள்­ளார், எந்த வகை­யான பாலி­யல் தொல்­லை­க­ளைக் கொடுத்­தார் என்­பது விரை­வில் தெரி­ய­வ­ரும் என்­றும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இத­னி­டையே கலா­ஷேத்ரா கல்­லூ­ரி­யின் இயக்­கு­நர் ரேவதி ராமச்­சந்­தி­ரன் சென்­னை­யில் உள்ள மாநில மக­ளிர் ஆணை­யத்­தில் முன்­னி­லை­யா­னார். அப்­போது ஆணை­யத்­தின் மாநி­லத் தலை­வர் குமாரி விசா­ரணை நடத்­தி­னார். விசா­ரணை முழு­மை­ய­டைந்த பின்­னர் அறிக்கை வெளி­யி­டப்­ப­டும் என மக­ளிர் ஆணைய வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

"கலா­ஷேத்ரா கல்­லூ­ரி­யில் புகார் பிரிவு உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. ஆனால் அந்­தப் பிரிவு இத்­தனை ஆண்­டு­க­ளாக முறை­யாக இயங்­கி­யதா எனத் தெரி­ய­வில்லை.

"அதற்­கு­ரிய ஆவ­ணங்­கள் எதை­யும் கல்­லூரி நிர்­வா­கம் வழங்­க­வில்லை," என மக­ளிர் ஆணை­யம் தெரி­வித்­தது.

இத­னி­டையே பாலியல் தொல்லை கொடுத்த புகாரை எதிர்கொண்டுள்ள பேராசிரியர் ஹரி பத்மன் உள்ளிட்ட நான்கு பேரையும் கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.