சென்னை: தமிழக ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே மாதம் 9ஆம் தேதி உண்ணாவிரதப் போட்டத்தில் இறங்க முடிவு எடுத்துள்ளனர். இதுகுறித்து ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், "தமிழ் நாடு அரசு, ஆட்டோவுக்கான மீட்டர் வழங்காததால் 2013ஆம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண உணர்வை அமல்படுத்தமுடியாமல் ஓட்டுநர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. டீசல் விலை ஏற்றத்தையடுத்து கட்டண உயர்வு குறித்து போக்குவரத்துத் துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. எனவே மீட்டர் கட்டணத்தை விரைவாக அறிவிக்க வேண்டும் என்றார் அவர்.

