'மூன்று ஆண்டுகளாக கிடப்பில் இருந்த ராகுல் வழக்கில் 30 நாள்களில் தீர்ப்பு ஏன்'

2 mins read
3d560e43-e399-4a85-a219-8618abc8029f
-

காரைக்­குடி: மூன்று ஆண்­டு­க­ளாக கிடப்­பில் போடப்­பட்­டி­ருந்த ராகுல் காந்­தி­யின் வழக்கை அவ­சர அவ­ச­ர­மாக முப்­பதே நாள்­களில் விசா­ரித்­துத் தீர்ப்பு வழங்­கக் கார­ணம் என்ன என்று முன்­னாள் மத்­திய அமைச்­சர் ப.சிதம்­ப­ரம் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

காங்­கி­ரஸ் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ப.சிதம்­ப­ரம் மற்­றும் கார்த்­திக் ஆகி­யோரை காரைக்­கு­டி­யில் நடந்த ஒரு நிகழ்ச்­சிக்­குப் பின் செய்­தி­யா­ளர்­கள் சந்­தித்­த­னர். அந்­தச் சந்­திப்­பின்­போது, செய்­தி­யா­ளர்­கள் கேட்ட கேள்­விக்­குப் பதி­ல­ளித்த ப.சிதம்­ப­ரம், "ராகுல்­காந்­தியை தகு­தி­நீக்­கம் செய்­த­தன்­மூ­லம் இந்­தி­யா­வில் உள்ள அத்­தனை எதிர்க்­கட்­சி­களும் பார­திய ஜனதா கட்­சிக்கு எதி­ராக ஒன்­றி­ணை­யும் வாய்ப்பை பிர­த­மர் நரேந்­திர மோடி­யின் அரசு ஏற்­ப­டுத்­தித் தந்­துள்­ளது. ராகுல் காந்தி மீது போடப்­பட்­டி­ருந்த வழக்கு 2019 ஆண்­டில் இருந்து கிடப்­பில் போடப்­பட்­டி­ருந்­தது. அந்த வழக்கை தற்­போது கையில் எடுத்து அவ­சர அவ­ச­ர­மாக விசா­ரித்து தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

வழக்கை விசா­ரிக்­க­வேண்­டாம் என வாதியே மனுத்­தாக்­கல் செய்­தும் குஜ­ராத் நீதி­மன்­றம் விசா­ரித்­துள்­ளது. ராகுல் காந்தி கர்­நா­டகா மாநி­லத்­தின் கோலா­ரில் பேசி­ய­தற்­காக குஜ­ராத் மாநி­லம் சூரத்­தில் அவ­தூறு வழக்கு தொட­ரப்­பட்­டது.

கோலா­ருக்­கும் சூரத்­துக்­கும் என்ன தொடர்பு என்று ப. சிதம்­ப­ரம் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

இது­வரை எந்த ஒரு குற்­ற­வியல் அவ­தூறு வழக்­கும் 30 நாட்­க­ளுக்­குள் விசா­ரித்து தீர்ப்பு அளிக்­கப்­பட்­ட­தில்லை. சூரத் நீதி­மன்­றத்­தில் வழக்கு நிலு­வை­யில் இருந்­த­போது நீதி­பதி மாற்­றப்­பட்­டார். 23ஆம் தேதி தண்­டனை நிறுத்­தி­வைக்­கப்­பட்ட பின் 24ஆம் தேதி அவ­சர அவ­ச­ர­மாக ராகுல் காந்தி தகுதி நீக்­கம் செய்­யப்­பட்­டார். அந்த உத்­த­ர­வில் கையெ­ழுத்­திட்­டது யார் என்­பது இன்­னும் புதிராகவே உள்­ளது. ராகுல் காந்தியை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யில் இருந்து தகுதி நீக்­கம் செய்­வ­தற்­குத் தேர்­தல் ஆணை­யம் பரிந்­து­ரைத்­துக் கையெ­ழுத்­தி­ட­வில்லை. தண்­ட­னைச் சட்­டம் நிறை­வேற்­றப்­பட்டு 163 ஆண்­டு­களில் வாய்­மொழி அவ­தூறு வழக்­கில் அதி­க­பட்­ச­மாக இரண்டு ஆண்டு தண்­டனை வழங்­கி­யதே இல்லை," என்­றார். மேலும் அவர் கூறு­கை­யில், ராகுல்­காந்தி பிர­த­மர் வேட்­பா­ள­ராக வர­வேண்­டும் என்­பது எங்­கள் நோக்­க­மல்ல. எதிர்­கட்­சி­களை ஒன்­றி­ணைத்து பாஜ­கவை அகற்ற வேண்­டும் என்­பதே எங்­க­ளது நோக்­கம் என்­றார்.