இந்திய கண் மருந்துக்குத் தடை விதித்தது அமெரிக்கா

2 mins read

தரமற்ற மருந்தால் மூவர் இறந்துவிட்டனர்; 8 பேருக்கு பார்வை பறிபோனதாகத் தகவல்

சென்னை: இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­பட்ட கண் மருந்தைப் பயன்­படுத்­திய அமெ­ரிக்­கர்­கள் பல­ருக்கு பல்­வேறு வித­மான பாதிப்பு­கள் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது.

இதை­ய­டுத்து அந்த மருந்தைப் பயன்­ப­டுத்­தக் கூடாது என அமெ­ரிக்­கா­வில் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்டு, அங்கு விற்­ப­னை­யா­கா­மல் உள்ள கண் மருந்தை மொத்­த­மாக திரும்­பப் பெற்­றுக் கொள்­வ­தாக அதன் உற்­பத்­தி­யா­ள­ரான 'குளோ­பல் ஃபார்மா' நிறு­வ­னம் அறி­வித்­துள்­ளது.

அந்த மருந்து நிறு­வ­னத்­தின் உற்­பத்தி நிலை­யம் சென்­னை­யில் இருந்து ஏறத்­தாழ நாற்­பது கிலோ மீட்­டர் தொலை­வில் உள்­ளது. அங்கு தயா­ரிக்­கப்­படும் கண் மருந்­து­தான் அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­று­ம­தி­யா­கின்றன.

இந்­நி­லை­யில், அந்­தக் கண் மருந்தைப் பயன்­ப­டுத்­தி­ய­தால் மூன்று அமெ­ரிக்­கர்­கள் பலி­யாகி­விட்­ட­தா­க­வும் எட்டு பேருக்கு கண் பார்வை பறி­போ­யுள்­ளது என்­றும் அமெ­ரிக்­கத் தரப்­பில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது. மேலும் ஏரா­ள­மா­னோ­ருக்கு பல்­வேறு வித­மான கண் பாதிப்­பு­கள் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்ட கண் மருந்து சுத்­த­மற்ற முறை­யில் தயா­ரிக்­கப்­பட்­ட­தாக எழுந்­துள்ள புகாரைத் தமி­ழக மருந்து கட்­டுப்­பாட்டு இயக்­கு­ந­ர­கம் திட்­ட­வட்­ட­மாக மறுத்­துள்­ளது.

"அந்­தக் கண் மருந்­தின் மாதி­ரி­கள் பரி­சோ­திக்­கப்­பட்­டன. அதன் மூலம் அந்த மருந்­தில் எந்­த­வி­த­மான தொற்று ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய கிரு­மியோ அல்­லது கண்­க­ளுக்­குப் பாதிப்பு ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய மாசு­களோ இல்லை.

"மருந்து தயா­ரிக்­கப் பயன்­படுத்­தப்­படும் மூலப் பொருள்­களும் உரிய தர நிலை­க­ளுக்கு ஏற்­பவே உள்ளன," என்று தமி­ழக மருந்து கட்­டுப்­பாட்டு இயக்­கு­நர் விஜ­ய­லட்­சுமி விளக்­கம் அளித்துள்­ளார்.

அமெ­ரிக்­கா­வில் நோய் கட்­டுப்­பாடு மற்­றும் தடுப்பு மையம் என்ற அமைப்­பு­தான் சென்னை நிறு­வ­னத்­தின் கண் மருந்து குறித்த குற்­றச்­சாட்டை எழுப்பி உள்­ளது.

கண்­களில் செயற்­கை­யா­கக் கண்­ணீரை வர­வ­ழைப்­ப­தன் மூலம் விழித்­திரை காய்ந்து போகா­மல் இருக்க இந்த கண் மருந்து உத­வு­கிறது. எனி­னும் அசுத்­த­மான முறை­யில் தயா­ரிக்­கப்­பட்ட இந்த மருந்­தின் மூலம் அமெ­ரிக்­கா­வில் இது­வரை கண்­ட­றி­யப்­ப­டாத கிரு­மித்­தொற்று பல­ருக்கு ஏற்­பட்­டுள்­ள­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

மொத்­தம் 55 வகை­யான கண் கோளா­று­க­ளால் ஏரா­ள­மா­னோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அமெ­ரிக்­கா­வின் 12 மாகா­ணங்­களில் இத்­த­கைய பாதிப்பு உள்­ள­தா­க­வும் அந்­நாட்டு ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

அண்­மைக்­கா­ல­மாக இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­பட்டு ஏற்­று­மதி செய்­யப்­படும் மருந்­து­க­ளின் தரம் தொடர்­பாக சில நாடு­கள் கேள்வி எழுப்பி வரு­கின்­றன.