தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாம்பு தீண்டியதில் மூளைச்சாவு என்றனர்; உயிர் பிழைத்தார்

1 mins read

பொள்ளாச்சி: பாம்பு தீண்­டி­ய­தால் மூளைச்­சாவு அடைந்­து­விட்­ட­தாகக் கரு­தப்­பட்ட இளை­யர் திடீ­ரென கண்­வி­ழித்­தார். இந்­தச் சம்­ப­வம் பொள்­ளாச்­சி­யில் நிகழ்ந்­துள்­ளது.

அங்­குள்ள தனி­யார் நிறு­வ­னத்­தில் 24 வய­தான லியா­கத் என்­பவர் பணி­யாற்றி வந்­தார். இரு நாள்­க­ளுக்கு முன்பு இவ­ரது முதுகில் கட்­டு­வி­ரி­யன் வகை பாம்பு கடித்­து­விட்­டது.

இத­னால் உடல் முழு­வ­தும் பாம்­பின் நச்சு வேக­மா­கப் பர­வி­யதை அடுத்து அரு­கி­லுள்ள அரசு மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார். பின்­னர் தனி­யார் மருத்­து­வ­ம­னை­யி­லும் சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. எனி­னும் அவர் மூளைச்­சாவு அடைந்­து­விட்­ட­தாக மருத்­து­வர்­கள் கைவி­ரித்­த­னர். இத­னால் கதறி அழுத போதி­லும் அவ­ரது குடும்­பத்­தார் நம்­பிக்கை இழக்­க­வில்லை.

ஈரோட்­டில் உள்ள பாம்­புக்­கடி சிகிச்சை மையத்­தில் அவரை அனு­ம­தித்­த­னர். இந்­நி­லை­யில் திடீர்த் திருப்­ப­மாக மூளைச்­சாவு அடைந்­த­தா­கக் கரு­தப்­பட்ட லியாகத் உயிர் பிழைத்­துள்­ளார். நினைவு திரும்­பிய அவர் நலமுடன் வீடு திரும்­பி­னார்.