தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டம் வேண்டாம்'

2 mins read

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் சூழலியல் குழு மத்திய அரசுக்கு வலியுறுத்து

திரு­வா­ரூர்: தமி­ழ­கத்­தின் பாது­காக்­கப்­பட்ட வேளாண் மண்­ட­லத்­தில் மத்­திய அர­சின் நிலக்­கரி எடுக்­கும் திட்­டங்­க­ளுக்கு தமி­ழ­கத்­தின் விவ­சா­யி­கள், அர­சி­யல் கட்­சி­கள் உள்­ளிட்ட ஏரா­ள­மான அமைப்­பு­க­ளைச் சேர்ந்­தோ­ரும் மக்­களும் எதிர்ப்­புத் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், தமி­ழ­கத்­தின் பாது­காக்­கப்­பட்ட வேளாண் மண்­ட­லத்­தில் நிலக்­க­ரிச் சுரங்­கத் திட்­டத்தை மத்­திய அரசு கைவிட வேண்­டும் என தமிழ்­நாடு அறி­வி­யல் இயக்­கம் மற்­றும் சூழ­லி­யல் துணைக்­கு­ழு­வி­னர் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

இது குறித்து இன்று தமிழ்­நாடு அறி­வி­யல் இயக்க மாநி­லத் துணைத் தலை­வர் வ.சேது­ரா­மன் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­னார்.

"பாது­காக்­கப்­பட்ட வேளாண் மண்­ட­ல­மா­கிய தஞ்­சா­வூர் மற்­றும் திரு­வா­ரூர் மாவட்­டங்­களில் நிலக்­கரி, நிலக்­கரி படுகை மீத்­தேன் (சிபி­எம்) மற்­றும் நிலத்­தடி நிலக்­க­ரியை வாயு­வாக்­கும் திட்­டங்­களை செயல்­ப­டுத்­து­வ­தற்­கான அழைப்­பா­ணைக் குறிப்பை மத்­திய அரசு வெளி­யிட்­டுள்­ளது.

நாடு முழு­வ­தும் 101 இடங்­களில் நிலக்­கரி மற்­றும் அதை சார்ந்த பொருட்­களை எடுக்க மத்­திய அரசு அழைப்­பாணை விடுத்­துள்­ளது. அதில் தமி­ழ­கத்­தின் மூன்று இடங்­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. காவிரி டெல்டா பகுதி பாது­காக்­கப்­பட்ட வேளாண் மண்­ட­ல­மாக அறி­விக்­கப்­பட்டு மூன்று ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. இங்கு எந்­த­வொரு ஹைட்ரோ கார்­பன் திட்­டத்­திற்­கும் அனு­மதி அளிக்­கப்­ப­டாது என்று தமி­ழக அரசு சட்­டம் இயற்­றி­யுள்­ளது. மேலும் நிலக்­க­ரிப் படுகை மீத்­தேன் திட்­டத்­திற்­குத் தஞ்சை மற்­றும் திரு­வா­ரூர் மாவட்ட ஆட்­சி­யர்­கள் கடந்த 2015ஆம் ஆண்­டில் பிறப்­பித்த நிரந்­த­ரத் தடை­யும் உள்­ளது.

முப்­போ­கம் விளை­யும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஏக்­கர்­களை கொண்ட முக்­கிய விவ­சா­யப் பகு­தி­களில் செயல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள இந்­தத் திட்­டம், விவ­சா­யத்­திற்­கும், நில வளத்­திற்­கும், நிலத்­தடி நீருக்­கும் எதி­ரா­னது. என­வே­தான் தமி­ழக அரசு பாது­காக்­கப்­பட்ட வேளாண் மண்­ட­லத்­தில் இத்­த­கைய செயல்­பா­டு­களை மேற்­கொள்­ளக் கூடாது எனத் தடை­வி­தித்து அர­சாணை வெளி­யிட்­டுள்­ளது. மேலும் காவிரி டெல்டா பகு­தி­யில் ஏலம் விடப்­பட்­டுள்ள நட­வ­டிக்கை தமி­ழக அர­சின் பாது­காப்பு மண்­டல அர­சா­ணைக்கு எதி­ராக உள்­ளது. ஆகவே மத்­திய அரசு உட­ன­டி­யாக மேற்­கண்ட அழைப்­பா­ணை­யில் பாது­காக்­கப்­பட்ட வேளாண் மண்­ட­லத்­தில் உள்ள தமி­ழ­கப் பகு­தி­களை விலக்­கிக்­கொள்ள வேண்­டும்," என சேது­ரா­மன் கேட்­டுக்­கொண்­டார்.

இந்­நி­லை­யில், பாது­காக்­கப்­பட்ட வேளாண் மண்­ட­லப் பகு­தி­கள் நிலக்­கரி எடுக்­கும் திட்­டத்­தில் இடம்­பெற்­றுள்­ள­தால் விவ­சா­யி­கள் அதிர்ச்சி அடைந்­துள்­ள­னர். வேளாண் மண்­ட­லத்­தில் நிலக்­கரி எடுக்­கும் திட்­டத்­திற்கு விவ­சா­யி­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர். நெல் வயல்­களை நிலக்­க­ரிச் சுரங்­க­மாக்­கி­னால் நாட்­டின் உணவு உற்­பத்தி பாதிக்­கப்படும் என விவ­சா­யி­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

பாது­காக்­கப்­பட்ட வேளாண் மண்­ட­லத்­தில் நிலக்­கரி எடுக்க தமிழ்­நாடு அரசு அனு­ம­திக்­காது என்று அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டா­லின் கூறி­யுள்­ளார். இது தொடர்­பாக சட்­டப்­பே­ர­வை­யில் பேச உள்­ள­தாக அமைச்­சர் உத­ய­நிதி தெரி­வித்­தார். திரு­வா­ருர் ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்ற ஆய்­வுக் கூட்­டத்­தில் பங்­கேற்ற அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டா­லின் பேட்­டி­யில் கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில், நிலக்­கரி விவ­கா­ரத்­தில் பிர­த­மர் மோடி தலை­யிட்டு தேவை­யற்ற குழப்­பங்­களை தவிர்க்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­றும் பிர­த­ம­ருக்கு முதல்­வர் மு.க ஸ்டா­லின் கடி­தம் எழு­தி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.