ஊட்டி தங்கும் விடுதி அறைக்காக இணையத்தில் முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகளிடம் மோசடி

ஊட்டி தங்கும் விடுதி அறைக்காக இணையத்தில் முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகளிடம் மோசடி

2 mins read

உதகை: நீல­கிரி மாவட்­டத்­தில் ஆண்­டு­தோ­றும் ஏப்­ரல், மே மாதங்­களில் கோடை காலத்­தின்­போது, சுற்­று­லாப் பய­ணி­கள் அதிக அள­வில் வரு­கின்­ற­னர். தமி­ழ­கம் மற்­றும் வெளி மாநி­லங்­க­ளைச் சேர்ந்த சுற்­றுலாப் பய­ணி­கள் இணை­யம் வழி­யாக உதகை, குன்­னூர் உள்­ளிட்ட பகு­தி­க­ளி­லுள்ள தங்­கும் விடு­தி­களில் அறை முன்­ப­திவு செய்­கின்­ற­னர். இவ்­வாறு இணை­யத்­தில் பணம் செலுத்தி அறை முன்­ப­திவு செய்­யும் சுற்­று­லாப் பய­ணி­க­ளி­டம் பணம் மோசடி செய்­யப்­ப­டு­வ­தாக தொடர்ந்து புகார்­கள் எழுந்து வரு­கின்­றன.

இது­கு­றித்து உதகை இணைய குற்­ற­வி­யல் ஆய்­வா­ளர் பிலிப் கூறி­ய­தா­வது, உத­கை­யில் தங்­கும் விடு­தி­கள் மற்­றும் காட்­டேஜ்­களில் அறை முன்­ப­திவு செய்­வார்­கள் என்­ப­தைத் தெரிந்­து­கொண்ட மோச­டிப் பேர்­வ­ழி­கள், இங்கு ஏற்­கெ­னவே உள்ள ஓட்­டல்­கள் அல்­லது ஓட்­டல்­களே இல்­லா­மல் ஏதா­வது ஒரு பெய­ரில் ஓட்­டல்­கள் இருப்­ப­து­போல இணை­யத்­தில் விவ­ரங்­களை பதி­வேற்­றம் செய்­வார்­கள்.

மேலும், 'சர்ச் இன்­ஜின் ஆப்­டி­மை­சே­ஷன்' என்ற தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி, உத­கை­யில் அறை உள்­ளதா என்று கூகு­ளில் யாரா­வது தேடி­னால், இவர்­கள் போலி­யாக உரு­வாக்­கிய முக­வரி, வங்­கிக் கணக்கு எண் விவ­ரங்­கள் முத­லில் வரும்­படி செய்­து­வி­டு­கின்­ற­னர்.

இதைத்­தொ­டர்ந்து அறை முன்­ப­திவு செய்து வங்­கிக் கணக்கு எண் மூல­மாக சுற்­று­லாப் பய­ணி­கள் பணம் செலுத்­து­கின்­ற­னர். அதன்­பின், உத­கைக்கு வரும் சுற்­றுலாப் பய­ணி­கள் குறிப்­பிட்ட ஓட்­ட­லுக்கு செல்­லும்­போது மோசடி சம்­ப­வம் நடந்­தி­ருப்­பது தெரிய வரு­கிறது. இதே­போல் பல­ரும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம். இது­கு­றித்து வலை­த்தள நிறு­வ­னத்­துக்குப் புகார் அளித்து, அந்த போலி இணை­யத்­தள முக­வ­ரியை நீக்க அறி­வு­றுத்தி கடி­தம் அளித்­துள்­ளோம். அதே­போல, இணை­யத்த­ளம் மூல­மாக பணம் செலுத்தி அறை முன்­ப­திவு செய்­யும் சுற்­றுலாப் பய­ணி­கள் அந்த ஓட்­டலை தரை­வழி தொலை­பேசி மூல­மாக தொடர்பு கொண்டு உறு­திப்­ப­டுத்­த­லாம். இல்­லா­விட்­டால் நம்­பிக்­கைக்­கு­ரிய செய­லி­கள் மூல­மாக அறை முன்­ப­திவு செய்­ய­லாம்," என்­றார் அவர்.