அயோத்தி திரைப்படக் கதை சர்ச்சை; சம்பந்தப்பட்டவர்களிடம் பேசியது தமிழ் முரசு

2 mins read
8a18f616-69b2-40e7-ab1c-eefe8d6b08e0
சிங்கப்பூர் எழுத்தாளர் மில்லத் அகம்மது (நடுவில், மேல் படம்) எழுதிய 'சிங்கப்பூரில் சரவணன்' நூலின் கதையைத்தான் அயோத்தி படம் தழுவியுள்ளது எனும் சர்ச்சை அண்மையில் கிளம்பியது. படம்: மில்லத் அகம்மது -

வினோத் கருப்பையா

நடி­கர் சசி­கு­மார் நடித்த அயோத்தி திரைப்­ப­டம் பொது­மக்­க­ளி­டையே அமோக வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது. சமய நல்­லி­ணக்­கம், எதிர்­பார்ப்­பு­கள் இல்­லா­மல் மற்­ற­வர்­க­ளுக்கு உத­வும் மனப்­பான்மை என கதைக்­க­ளம் அமைந்­துள்­ளது.

இருப்­பி­னும் அப்­ப­டத்­தின் கதை தங்­க­ளு­டை­யது என்று சில எழுத்­தா­ளர்­கள் தமி­ழக ஊட­கங்­கள் வழி செய்தி வெளி­யிட்­டுள்­ள­னர். அவர்­களில் 'சிங்­கப்­பூ­ரில் சர­வ­ணன்' என்ற நாவலை எழு­திய திரு மில்­லத் அகம்­ம­தும் ஒரு­வர். திரைப்­ப­டத்­தின் கதை யாரு­டை­யது, கதைக்­கரு திரு­டப்­பட்­டதா என்­பது குறித்து எழுத்­தா­ளர் மில்­லத், அயோத்தி படத்­தின் தயா­ரிப்­பா­ளர், எழுத்­தா­ளர் எஸ். ராம­கி­ருஷ்­ணன் ஆகி­யோ­ரு­டன் தமிழ் முரசு தொடர்­பு­கொண்டு பேசி­யது.

"சிங்­கப்­பூ­ரில் சர­வ­ணன் என்ற என்­னு­டைய நாவல், 2016ல் சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் கழ­கம் நடத்­திய குறு­நா­வல் போட்­டி­யில் வெற்றி பெற்ற கதை. அது 2020ல் சென்னை புத்­த­கக் காட்­சி­யில் நூலா­க­வும் வெளி­யா­னது," என்­றார் மில்­லத்.

"எனது நாவ­லின் மையக்­கருத்து வெளி­நாட்­டில் இறந்­த­வ­ரின் உடலை விமா­னம் மூலம் ஏழு சான்­றி­தழ்­க­ளு­டன் இந்­தி­யா­விற்குக் கொண்டு செல்வதைப் பற்றியது. அயோத்தி திரைப்­ப­டத்­தி­லும் அதே­போன்ற கதைக்­க­ளம் தான் உள்­ளது," என்று மில்­லத் குறிப்­பிட்­டார்.

முக்­கி­ய­மாக நாவ­லில், இறந்த இந்து நப­ரின் உட­லைக் கொண்டு செல்­வது ஒரு கிறிஸ்­துவ­ரும், இஸ்­லா­மி­ய­ரும். அதே­போன்­று­தான் அயோத்தி படத்­தி­லும் கதை அமைந்­துள்­ளது என்­றார் எழுத்­தா­ளர் மில்­லத்.

தமது கதைக்கு அங்­கீ­கா­ரம் கிடைக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கவே ஊட­கங்­களை நாடி­ய­தாக மில்­லத் கூறி­னார்.

அயோத்தி திரைப்­ப­டத்­தின் கதை பொது­ந­லம் தொடர்­பான கதை. வெளி ஊர்­க­ளுக்குச் செல்­லும்­போது ஒரு தவ­றான அசம்­பா­விதம் ஏற்­பட்­டால் என்ன செய்­வது என்­பதை எடுத்­துக்­கூ­றும் விழிப்­பு­ணர்வுப் படம் இது. படத்­தில் சமய நல்­லி­ணக்­கம் இருப்­பது கூடு­தல் சிறப்பு என்­றார் படத்­தைத் தயா­ரித்த Trident Art நிறு­வ­னத்­தின் ரவீந்­தி­ரன்.

"படத்­தின் கதை திரு­டப்­பட்­டதா இல்­லையா என்­பது எனக்கு தெரி­யாது. ஆனால் தயா­ரிப்பு நிறு­வ­னம் எழுத்­தா­ளர் எஸ்.ராம­கி­ருஷ்­ண­னி­டம் பணம் கொடுத்து­தான் கதையை வாங்­கி­யது. சம்­பந்­தப்­பட்ட எழுத்­தா­ளர்­கள் அவர்­க­ளுக்­குள் பேசி முடிவு செய்து கொள்­வது நல்­லது," என்­றார் ரவீந்­தி­ரன்.

"அயோத்தி திரைப்­ப­டக் கதை என்­னு­டை­யது. அது யாருக்­கும் சொந்­த­மா­னது என்று கூற­மு­டி­யாது. நாளி­தழ்­களில் வெளி­யான செய்­தி­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டும் உண்­மை­யான சம்­ப­வங்­களைக் கலந்­தும் எழு­தப்­பட்ட கதை இது. அது படத்­தி­லும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது," என்­கி­றார் எழுத்­தா­ளர் எஸ்.ராம­கி­ருஷ்­ணன்

"ஒரு கதை என்­பது உண்­மை­யும் கற்­ப­னை­யும் கலந்து படைப்­பா­ளி­யின் கலைத்­தி­ற­னால் உரு­வா­வது. சாலை விபத்து மற்­றும் குற்­றச் செய்­தி­க­ளுக்கு யாரோ உரிமை கோரி­னால் எந்­தப் படைப்­பா­ள­ரா­லும் எதை­யும் எழுத முடி­யாது," என்று எழுத்­தா­ளர் எஸ்.ராம­கி­ருஷ்­ணன் விளக்­க­ம­ளித்­துள்­ளார்.