தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலக்கரி சுரங்க விவகாரம் மக்களவையில் எதிர்ப்பு

2 mins read

சென்னை: தமிழ்­நாடு அரசு வேளாண் மண்­ட­லத்­தில் நிலக்­க­ரிச் சுரங்­கம் அமைக்க அனு­ம­திக்­காது என்­பதை மத்­திய அர­சின் கவ­னத்­திற்­குத் தெரி­வித்­துள்­ளோம் என்று அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு தெரி­வித்­துள்­ளார்.

டெல்டா பகு­தி­களில் நிலக்­கரிச் சுரங்­கம் அமைப்­பது தொடர்­பாக சட்­டப்­பே­ர­வை­யில் கவன ஈர்ப்­புத் தீர்­மா­னம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. திமுக சட்­ட­மன்ற உறுப்­பி­னர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு கவன ஈர்ப்பு தீர்­மா­னம் கொண்டு வந்­தார்.

பின்­னர் நிலக்­க­ரிச் சுரங்­கம் தொடர்­பான சிறப்­புக் கவன ஈர்ப்பு தீர்­மா­னம் மீது பேர­வை­யில் தொழில்­துறை அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு பதில் அளித்­தார். அப்­போது பேசிய அவர், புதிய நிலக்­கரி சுரங்க விவ­கா­ரத்­தில் தமிழ்­நாடு அர­சின் கருத்­தைக் கேட்­கா­மல் மத்­திய அரசு தன்­னிச்­சை­யாக முடி­வெ­டுத்­தது.

மாநில அர­சு­டன் முத­லில் கலந்து ஆலோ­சித்­தி­ருக்க வேண்­டும் என்று முத­ல­மைச்­சர் நேற்று முன்­தி­னம் கடி­தம் எழு­தி­யி­ருந்­தார்.

தமிழ்­நாடு அரசு ஒரு­போ­தும் நிலக்­கரி சுரங்­கத் திட்­டத்தை அனு­ம­திக்­காது என்­பதை மத்­திய அர­சின் கவ­னத்­துக்­குத் தெரி­வித்­துள்­ளோம்.

தமிழ்­நாட்­டின் நெற்­க­ளஞ்­சி­யத்­தில் ஒரு­போ­தும் இத்­திட்­டத்தை தமிழ்­நாடு அரசு அனு­ம­திக்­காது என்­றார். தொடர்ந்து பேசிய தங்­கம் தென்­ன­ரசு, தனி­யா­ருக்கு தாரை­வார்ப்­பதை பற்றி பா.ஜ.க.வின் வானதி சீனி­வா­சன் பேசு­வது வேடிக்­கை­யாக உள்­ளது. பாது­காக்­கப்­பட்ட வேளாண் மண்­ட­லம் என அறி­வித்­த­போது அதில் சில­வற்றை அதி­முக விட்­டு­விட்­டது என்று கூறி­னார்.

திமுக சட்­ட­மன்ற உறுப்­பி­னர் டி.ஆர்.பி. ராஜா: மாநில அர­சுக்­குத் தெரி­விக்­கா­ம­லேயே மத்­திய அரசு அறி­விப்பு வெளி­யிட்­டுள்­ளது. நிலக்­க­ரிச் சுரங்­கம் அமைப்­பது தொடர்­பான தக­வல் வெளி­யான உட­னேயே எதிர்ப்­புத் தெரி­வித்து பிர­த­மர் மோடிக்கு முதல்­வர் கடி­தம் எழு­தி­னார்.

நிலக்­க­ரிச் சுரங்­கம் அமைக்க அனு­ம­திக்­கப்­ப­டாது என தமிழ்­நாடு அரசு திட்­ட­வட்­ட­மாக கூறி­யுள்­ளது. நெற்­க­ளத்­தில் நிலக்­க­ரியா என டெல்டா மக்­கள் அதிர்ச்­சி­யில் உள்­ள­னர் என்று டி.ஆர்.பி.ராஜா கூறி­னார்.

அதி­முக: காவிரி டெல்டா மாவட்­டங்­களில் நிலக்­கரி சுரங்­கம் அமைப்­பதை தடுத்து நிறுத்த அதி­முக வலி­யு­றுத்­தி­யுள்­ளது. கவன ஈர்ப்­புத் தீர்­மா­னம் மீது அதி­முக முன்­னாள் அமைச்­சர் காம­ராஜ் பேசி­னார்.

காங்­கி­ரஸ்: சட்­டப்­பே­ர­வை­யில் கவன ஈர்ப்­புத் தீர்­மா­னம் மீது காங்­கி­ரஸ் உறுப்­பி­னர் செல்­வப்­பெ­ருந்­தகை பேசி­னார். டெல்டா மாவட்­டங்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைப் பறிக்­கும் வகை­யில் மத்­திய அரசு அறி­விப்பு வெளி­யிட்­டுள்­ளது. தமிழ்­நாடு அர­சைக் கலந்து ஆலோ­சிக்­கா­மல் இது­போன்ற அறி­விப்பை விடுத்­துள்­ளது ஜன­நா­ய­கத்­துக்கு எதி­ரான செயல். முத­ல­மைச்­சர் கடி­தத்­திற்கு மதிப்­ப­ளித்து திட்­டத்தை மத்­திய அரசு உடனே கைவிட வேண்­டும் என்று செல்­வப்­பெ­ருந்­தகை கேட்­டுக் கொண்­டார்.

பாமக: சட்­டப்­பே­ர­வை­யில் கவன ஈர்ப்­புத் தீர்­மா­னத்­தின் மீது பாமக உறுப்­பி­னர் ஜி.கே.மணி பேசி­னார்.

நிலக்­க­ரித் திட்­டத்­துக்கு எதி­ராக மத்­திய அர­சுக்கு முத­ல­மைச்­சர் கடி­தம் எழு­தி­ய­தற்கு நன்றி. தஞ்சை தரணி என்­பது தமிழ்­நாட்­டின் நெற்­க­ளஞ்­சி­யம். எந்­த பாதிப்­பும் ஏற்­ப­டா­மல் இருக்­கவே பாது­காக்­கப்­பட்ட வேளாண் மண்­ட­ல­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது என கூறி­னார்.

விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி: காவிரி டெல்டா மாவட்­டங்­களில் நிலக்­கரி சுரங்­கம் அமைப்­பதை தடுத்து நிறுத்த வி.சி.க. வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

சட்­டப்­பே­ர­வை­யில் கவன ஈர்ப்பு தீர்­மா­னம் பற்றி வி.சி.க. உறுப்­பி­னர் சிந்­த­னைச்­செல்­வன் பேசி­னார்.