தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருச்சியில் ரூ.600 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா

2 mins read

தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: திருச்­சி­யில் ரூ.600 கோடி­யில் தக­வல் தொழில்­நுட்­பப் பூங்கா அமைக்­கப்­படும் என்று தொழில் துறை அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு அறி­வித்­தார்.

தமிழ்­நாடு சட்­டப்­பே­ர­வை­யில் நிதி­நிலை அறிக்கை கூட்­டத்­தொ­டர் நடை­பெற்று வரு­கிறது. இதில் நேற்று (ஏப்.6) தொழில் முத­லீட்டு ஊக்­கு­விப்பு மற்­றும் வர்த்­த­கத்­துறை தொடர்­பான மானி­யக் கோரிக்­கை­கள் மீது விவா­தம் நடை­பெற்­றது.

இத­னைத் தொடர்ந்து தொழில் முத­லீட்டு ஊக்­கு­விப்பு மற்­றும் வர்த்­த­கத் துறை அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு புதிய அறி­விப்­பு­களை வெளி­யிட்­டார்.

இதன் விவ­ரம்: சிப்­காட் பூங்­கா­வில் தொழி­லா­ளர்­கள் மற்­றும் பயிற்சி பெறு­ப­வர்­கள் பயன்­பாட்­டிற்­காக ரூ.30 கோடி­யில் 600 படுக்­கை­கள் கொண்ட தங்­கு­மி­டம் கட்­டப்­படும் என்று கூறி­னார்.

தண்­ணீ­ரைப் பாது­காக்­கும் வகை­யில் நீர்ப் பயன்­பாடு, விர­யம் ஆகி­ய­வற்­றைக் கட்­டுப்­ப­டுத்­த­வும் கண்­கா­ணிக்­க­வும் நவீன முறை­யி­லான கரு­வி­களும் அமைப்­பு­களும் சிப்­காட்­டில் உரு­வாக்­கப்­படும் என்று கூறி­னார்.

மேலும், இருங்­காட்­டுக்­கோட்டை மற்­றும் செய்­யாறு சிப்­காட் தொழில் பூங்­கா­வில் ரூ.20 கோடி­யில் இரண்டு தங்­கு­மி­டம் கட்­டப்­படும் என்று அவர் கூறி­னார். தமிழ் நாட்­டில் நில­வும் வெப்­பத்­தைத் தணிக்­கும் வகை­யில், மணப்­பாறை, தேனி, திண்­டி­வ­னம், சூள­கிரி ஆகிய சிப்­காட்­டு­களில் ரூ.20 கோடி­யில் நூறா­யி­ரம் மரக்­கன்­று­கள் நடப்­படும். விரு­து­ந­கர், தேனி, சூள­கிரி சிப்­காட்­டு­களில் நிர்­வாக அலு­வ­ல­கம் கட்­டப்­படும்.

திரு­வள்­ளூர் மாவட்­டம் கார­ணி­யில் 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்­கும் வகை­யில் ரூ.100 கோடி­யில் தொழிற்­பூங்கா அமைக்­கப்­படும். ரூ.600 கோடி­யில் திருச்­சி­யில் தக­வல் தொழில்­நுட்­பப் பூங்­கா­வும் ரூ.70 கோடி­யில் காரைக்­குடி மற்­றும் ராசி­பு­ரத்­தில் சிறிய அள­வி­லான தக­வல் தொழில்­நுட்­பப் பூங்­கா­வும் அமைக்­கப்­படும்.

இத­னைத் தொடர்ந்து குறு, சிறு மற்­றும் நடுத்­த­ரத் தொழில் நிறு­வ­னங்­கள் துறை அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் புதிய அறி­விப்­பு­களை வெளி­யிட்­டார்.

அதில், கிண்­டி­யில் ரூ.175 கோடி­யில் தொழில் வளா­கம் அமைக்­கப்­ப­டு­வது குறித்­துத் தெரி­வித்­தார். இதன்­மூ­லம் 2,200 பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­கும். செங்­கல்­பட்டு மாவட்­டத்தின் முள்­ளி­கொ­ளத்­தூ­ரில் 28 ஏக்­க­ரில் ரூ.14 கோடி திட்ட மதிப்­பீட்­டில் புதிய தொழிற்­பேட்டை அமைக்­கப்­படும். மேலும் தமி­ழ­கத்­தில் தொ­ழில் நிறு­வ­னங்­க­ளுக்­குத் தேவை­யான வளங்­களை உலக அள­வில் ஒருங்­கி­ணைக்க துபா­யில் புத்­தொ­ழில் மையம் அமைக்­கப்­படும் என்­றார் அமைச்சர் அன்பரசன்.