சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தின் மூவரசம்பட்டு கோயில் குளத்தில் புதன்கிழமை நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது, ஐந்து இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஏப்.6) செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டில் தீர்த்தவாரியின்போது குளத்தில் 5 பேர் இறந்ததற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்காக தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

