ஊழல்: பழனிசாமியிடம் விசாரிக்க அரசு அனுமதி

ஊழல்: பழனிசாமியிடம் விசாரிக்க அரசு அனுமதி

2 mins read
1051a541-0c22-4659-a3a5-e6cc5681d2b3
-

11 மருத்துவமனைகள் கட்டியது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

சென்னை: கடந்த அதி­முக ஆட்சிக் காலத்­தில் மருத்­து­வக் கல்­லூ­ரி­கள் கட்­டி­ய­தில் முறை­கேடு­கள் நடந்­தி­ருப்­ப­தாக எழுந்­துள்ள புகார்­கள் குறித்து லஞ்ச ஒழிப்­புத்­துறை விசா­ரணை நடத்த உள்­ளது. இதற்­கான அனு­ம­தியை தமிழ்­நாடு அரசு வழங்­கி­யுள்­ளது.

இந்த முறை­கேடு புகார்­கள் தொடர்­பாக முன்­னாள் முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சா­மி­யி­டம் விசா­ரணை நடத்­தப்­படும் என்று வெளி­யான தக­வல்­கள் அதி­மு­க­வி­னர் மத்­தி­யில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

கடந்த அதி­முக ஆட்­சி­யின்­போது 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை முதல்­வ­ராக இருந்த எடப்­பாடி பழ­னி­சாமி பொதுத்­து­றைக்­கும் அமைச்­ச­ராகப் பொறுப்­பேற்­றி­ருந்­தார்.

அச்­ச­ம­யம் திரு­வள்­ளூர், அரிய­லூர், கள்­ளக்­கு­றிச்சி, திருப்­பூர், நீல­கிரி, நாகப்­பட்­டி­னம், நாமக்­கல், கிருஷ்­ண­கிரி, திண்­டுக்­கல், ராம­நா­த­பு­ரம், விரு­து­ந­கர் ஆகிய 11 மாவட்­டங்­களில் புதிய மருத்­து­வக் கல்­லூ­ரி­கள் கட்­டப்­பட்­டன.

மொத்­தம் ரூ.4 ஆயி­ரம் கோடி­செல­வில் இந்­தக் கல்­லூ­ரி­கள் கட்­டப்­பட்ட நிலை­யில், பல்­வேறு முறை­கே­டு­கள் நடந்­துள்­ள­தாக சில தரப்­பி­னர் புகார் எழுப்­பி­னர்.

இதை­ய­டுத்து நடப்பு திமுக அரசு, இந்த முறை­கே­டு­கள் தொடர்­பாக விசா­ரணைக்கு அனுமதி வழங்­கி­யுள்­ளது.

புதிய மருத்­துவக் கல்­லூ­ரி­களைக் கட்­டி­ய­தில் மத்­திய சுகா­­தா­ரத்­து­றை­யின் வழி­காட்­டு­தல்­கள் மீறப்­பட்­டுள்­ள­தாக லஞ்ச ஒழிப்­புத்­துறை தரப்­பில் கூறப்­ப­டு­கிறது. இதற்­கான ஆதா­ரங்­கள் இருப்­ப­தாக அத்துறையின் அதி­கா­ரி­கள் ஏற்­கெனவே கூறி­யி­ருந்­த­னர்.

எனி­னும் எடப்­பாடி பழ­னி­சாமி தற்­போது சட்டப்பேரவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருப்­ப­தால் அவ­ரி­டம் விசா­ரணை நடத்­து­வ­தற்கு தமி­ழக அர­சின் அனு­மதி கோரி லஞ்ச ஒழிப்­புத்­துறை கடி­தம் எழு­தி­யி­ருந்­தது.

கடந்த அதி­முக ஆட்­சி­யின்­போது பொதுப்­ப­ணித்­துறை நிர்­வா­கம்­தான் மருத்­து­வக் கல்­லூரிக்­கான கட்­டடங்­களை கட்­டு­வ­தற்கு அனு­மதி பெற்­றி­ருந்­தது என்­றும் அதற்­கான ஒப்­பந்­தங்­க­ளை­யும் வழங்கி இருந்­தது என்­றும் லஞ்ச ஒழிப்­புத்­துறை சுட்­டிக்­காட்டி உள்ளது.

இதில், பல்­வேறு முறை­கே­டு­கள் நடந்­தி­ருப்­ப­தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்ள நிலை­யில், ஒப்­பந்­த­தா­ரர்­கள், அந்த கட்­ட­டங்களைக் கட்டிய அரசு பொறி­யா­ளர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­து­வ­து­டன் பொதுப்­ப­ணித்­துறை அமைச்­ச­ராக இருந்த எடப்­பாடி பழ­னி­சா­மி­யி­டம் விசா­ரணை நடத்த லஞ்ச ஒழிப்­புத்­துறை முடிவு செய்­துள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

உரிய ஆதா­ரங்­கள், நடை­முறை­க­ளின் அடிப்­ப­டை­யில் எடப்பாடி பழ­னி­சா­மி­யி­டம் விசா­ரணை நடத்­தப்­படும் என அதி­காரி­கள் தெரி­வித்­த­தாக ஊட­கச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே இந்த விசா­ரணை­யா­னது திமுக அர­சின் பழி­வாங்­கும் நட­வ­டிக்கை என அதி­முக தரப்­பில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது.