மதுரை: மதுரை புதுநத்தம் சாலையில், பாரத் மாலா திட்டத்தின் கீழ் உயர்மட்ட மேம்பாலம் (படம்) கட்டப்பட்டுள்ளது.
தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை 7.3 கிலோமீட்டர் தொலைவிற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி அண்மையில் நிறைவுபெற்றன.
268 தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில், மூன்று இடங்களில் வாகனங்கள் இறங்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இறுதிக்கட்டப் பணிகள் முடிந்ததையடுத்து இம்மாதம் 6ஆம் தேதி பாலத்தில் வாகனங்களை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி மதுரை மேம்பாலத்தையும் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்.

