சென்னை: நலத்திட்டங்களைத் தொடங்கிவைக்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்றபோது முதல்வர் மு.க.ஸ்டாலின், 'தமிழகத்தில் காந்தியின் பயணங்கள்' எனும் நூலைப் பரிசாக அளித்தார்.
அ. ராமசாமி எழுதிய அந் நூலை பி.சி.ராமகிருஷ்ணன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய காந்தி, 1896ல் முதல்முறைவருகை தந்ததிலிருந்து, சுதந்திரம் கிடைப்பதற்கு ஓராண்டுக்கு முன்பாக அவர் கடைசியாக சென்னை வந்தது வரையிலான காந்தியின் தமிழகப் பயணங்கள் அந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மகாத்மா காந்திக்கு எதிராகவும் கோட்சேக்கு ஆதரவாகவும் சில பாஜக நிர்வாகிகள் கருத்துரைக்கும் நிலையில், பிரதமருக்கு முதல்வர் அந்த நூலை அளித்திருப்பதை கவனிப்பாளர்கள் சுட்டினர்.

