700 ஆண்டுப் பழைமையான வீரபத்திரர் சிலை கண்டுபிடிப்பு

1 mins read
76a06c5f-b3e3-41c9-94b2-fec13cc38b77
-

கிருஷ்­ண­கிரி: தளி அருகே 700 ஆண்­டு­கள் பழைமை­யான ஹொய்­சா­ளர் கால வீர­பத்­தி­ரர் சிலை கண்டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக கிருஷ்­ண­கிரி அரசு அருங்­காட்­சி­ய­கம் தெரி­வித்­துள்­ளது.

கிருஷ்­ண­கிரி வர­லாற்று ஆய்வு, ஆவ­ணப்­ப­டுத்­தும் குழு­வி­ன­ரு­டன் இணைந்து கும்­ம­ளா­பு­ரம் எனும் இடத்­தில் கள ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக அது கூறி­யது.

அந்த ஊரின் வீர­பத்­தி­ரர் கோயில் இடிக்­கப்­பட்டு, புதுப்­பிப்­புப் பணி நடை­பெற்று வரு­வதை அறிந்து குழு­வி­னர் அங்கு ஆய்வு செய்­த­னர்.

அப்­போது, இடித்து அகற்­றப்­பட்­டி­ருந்த கற்­க­ளுக்­கி­டையே ஒன்­றரை அடி உய­ரத்­தில் மாக்­கல்­லில் செதுக்­கப்­பட்ட வீர­பத்­தி­ரர் சிலை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தில் ஹொய்­சா­ளர் ஆட்­சி­யின் அடை­யா­ளங்­க­ளா­கப் பல கல்­வெட்­டு­கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன.

ஆனால், மாக்­கல்­லால் செதுக்­கப்­பட்ட சிலை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது இதுவே முதல்­முறை.

சிலை தற்­போது கிருஷ்­ண­கிரி மாவட்ட அரசு அருங்­காட்­சி­ய­கத்­தில் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஊட­கங்­கள் கூறின.

பல ஆண்­டு­க­ளா­கப் பூமி­யில் புதை­யுண்­டி­ருந்­த­தால் சிலை தேய்­மா­னத்­து­டன் காணப்­ப­டு­வ­தா­கக் கூறப்­பட்­டது.

வீர­பத்­தி­ரர் வலக்­கை­யில் கத்தி ஏந்­தி­ய­வாறு இடக்­கை­யைப் பீடத்­தில் ஊன்­றி­யுள்ள கேட­யத்­தின்­மீது வைத்­தி­ருப்­ப­து­போ­ல­வும் வலது, இடது பின் கரங்­களில் முறையே அம்பு, வில்லை வைத்­தி­ருப்­ப­து­போன்­றும் அச்­சிலை வடிக்­கப்­பட்­டுள்­ளது.

வலப்­பு­றம் சிறிய உரு­வ­மாக வணங்­கும் நிலை­யில் ஆட்­டுத் தலை­யு­டன் கூடிய தட்­ச­னின் உரு­வ­மும் இடப்­பு­றம் வீர­பத்­தி­ர­ரைப்­போ­லவே கைகளில் கத்தி, கேட­யத்­தோடு நிற்­கும் தேவி­யின் உரு­வ­மும் செதுக்­கப்­பட்­டுள்­ளது.

வழக்­க­மாக தமிழக வீர­பத்­தி­ரர் சிலை­, சிற்பங்களில் தேவி உரு­வம் பொறிக்­கப்­ப­டு­வ­தில்லை என்­ப­தால் இந்­தச் சிலை குறித்­தும், கும்மாளபுரம் வட்டாரம் குறித்தும் கூடு­தல் ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­படும் எனத் தெரிவிக்கப்பட்டது.