14 வயதில் 10 செயலிகள் உருவாக்கி சாதனை படைத்த தமிழகச் சிறுவன்

1 mins read
ad4f4dc6-d403-48a3-98a6-723b419b6a46
-

சென்னை: கணி­னித்­து­றை­யில் சாதித்து வரும் கோவை­யைச் சேர்ந்த பள்ளி மாண­வ­ரான பரத் கார்த்­திகிற்கு உல­கின் இளம் தொழில்முனை­வர் எனும் விருது வழங்­கப்­பட்­டுள்­ளது.

நோபல் உலக சாதனைப் புத்­த­கத்­தின் சார்­பாக வழங்­கப்­பட்­டு இருக்கும் இந்த விருது மேலும் சாதிக்க தமக்கு ஊக்­கம் அளிப்­ப­தாக பரத் கார்த்­திக் தெரி­வித்­து உள்­ளார்.

கோவை­யைச் சேர்ந்த ஹரி கிருஷ்­ணன், ராஜேஷ்­வரி தம்­ப­தி­ய­ரின் மக­னான பரத்­துக்கு இப்­போ­து­தான் 14 வய­தா­கிறது. பத்­தாம் வகுப்பு படித்து வரு­கி­றார்.

சிறு வயது முதல் கணி­னித்­து­றை­யில் ஆர்­வம் கொண்­டி­ருந்த பரத்­தின் திற­மை­யைக் கண்டு வியந்த பெற்­றோர், மடிக்­க­ணினி, கணினி சாத­னங்­களை வாங்­கிக் கொடுத்து மகனை ஊக்­கப்­படுத்தி உள்­ள­னர்.

ஒரு கட்­டத்­தில் சமூக ஊட­கங்­க­ளைப் போன்று சில இணை­யத்­த­ளங்­களை உரு­வாக்­கி­னார் பரத். பின்­னர் சில கைப்­பேசி செய­லி­க­ளை­யும் அடுத்­த­டுத்து அவர் உரு­வாக்­கி­ய­போது, அவர் படித்த பள்­ளி­யின் நிர்­வா­கத் தரப்­பும் வியந்­து­போ­னது.

பரத் உரு­வாக்­கி­யுள்ள பத்­துக்­கும் மேற்­பட்ட செய­லி­களை பல்­வேறு பள்ளி, கல்­லூ­ரி­கள் பயன்­படுத்தி வரு­கின்­றன.

மாண­வர்­க­ளுக்கு அன்­றா­டம் நடத்­தப்­படும் வகுப்­பு­கள், தேர்­வில் பெற்ற மதிப்­பெண்­கள், பள்ளி நிகழ்­வு­கள் உள்­ளிட்ட பல்­வேறு தக­வல்­களை இந்­தக் கைப்பேசி செயலி மூலம் பெற்­றோர் தெரிந்து­கொள்ள முடி­யும்.

இந்த இளம் வய­தி­லேயே கோவை­யில் உள்ள சில கல்­லூ­ரி­க­ளுக்கு ஆலோ­ச­க­ரா­கப் பணி­யாற்றி வரும் பரத்­தின் சாத­னையை அங்­கீ­க­ரிக்­கும் வகை­யில், நோபல் உலக சாதனை புத்­த­கம் அவ­ருக்கு உல­கின் இளம் தொழில் முனை­வர் எனும் விருதை வழங்கி கௌர­வித்­துள்­ளது. பரத்­துக்கு வாழ்த்துகள் குவிகின்றன.