தூத்துக்குடி: தமிழகத்தில் நடைபெற்ற முந்தைய அகழாய்வுகளின்போது கிடைத்த முதுமக்கள் தாழிகளில் எலும்புக்கூடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஆதிச்சநல்லூர், சிவகளை பகுதிகளில் கிடைத்த எலும்புகளைக் கொண்டு அப்பகுதியில் வாழும் மக்களிடம் மரபணு சோதனை நடத்தப்படவுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் இந்த மரபணு சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மட்டும் 170க்கும் மேற்பட்ட எலும்புகள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன.
மரபணுச் சோதனைமூலம் ஆதிச்சநல்லூர், சிவகளையில் கிடைத்த எலும்புக் கூடுகள் தற்போது அங்கு வசிப்பவர்களின் மூதாதையர்களின் எலும்புகளா என்பதைக் கண்டறிய வேண்டும் என சமூக ஆர்வலர் காந்திமதிநாதன் வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் அத்தகைய மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசின் தொல்லியல் துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

