தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருவாரூரில் ஒரே நாளில் பத்துப் போலி மருத்துவர்கள் கைது

1 mins read

திருவாரூர்: ஒரே நாளில் பத்துப் போலி மருத்­து­வர்­கள் கைது செய்­யப்­பட்­ட­தால் திரு­வா­ரூர் மாவட்ட மக்­கள் அதிர்ச்சியடைந்­துள்­ள­னர்.

அனை­வ­ருமே கைது செய்­யப்­படும் வரை ஏரா­ள­மான மக்­க­ளுக்கு சிகிச்சை அளித்து வந்­துள்­ள­னர் என்­ப­தும் அவர்­கள் மீது யாருக்­கும் எந்­த­வி­த­மான சந்­தே­க­மும் ஏற்­ப­ட­வில்லை என்­பதும் காவல்­து­றைக்­கும் அதிர்ச்சி அளித்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் சில ஆண்­டு­களாக போலி மருத்­து­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. இது தொடர்­பாக அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் எனச் சமூக ஆர்­வ­லர்­கள் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், திரு­வா­ரூ­ரில் உள்ள போலி மருத்­து­வர்­களை அடை­யா­ளம் கண்டு நட­வ­டிக்கை எடுக்க அம்­மா­வட்ட காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ளர் சுரேஷ்­கு­மார் உத்­த­ர­விட்­டார்.

அதன் பேரில் நன்­னி­லம், முத்துப்­பேட்டை உள்­ளிட்ட பல்வேறு இடங்­களில் காவல்­துறை­யி­னர் திடீர் சோதனை நட­வடிக்கை மேற்­கொண்­ட­னர். அப்­போது, முறை­யாக மருத்­து­வம் படிக்­கா­மல் சிலர் நோயா­ளி­க­ளுக்கு மருந்து மாத்­தி­ரை­கள் வழங்­கி­யும் ஊசி செலுத்­தி­யும் சிகிச்சை அளித்­தது அம்­ப­ல­மா­னது. அனை­வ­ரும் போலி மருத்து­வர்­கள் என்­பதை உறுதி செய்த காவல்­து­றை­யி­னர் பத்து பேரை கைது செய்து சிறை­யில் அடைத்­துள்­ளனர்.

அண்­மை­யில் சேலத்­தி­லும் இரண்டு போலி மருத்­து­வர்­கள் சிக்­கி­னர். அங்கு மருத்­து­வத்­துறை இணை இயக்­கு­நர் சாந்தி மேற்­கொண்ட சோதனை நட­வடிக்கை­யின்­போது இரு­வ­ரும் பிடி­பட்­ட­னர். அடுத்­த­டுத்து மேலும் பல மாவட்­டங்­களில் போலி மருத்­து­வர்­க­ளைக் கண்­ட­றி­யும் நட­வடிக்கை நீடிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.