செய்திக்கொத்து சாலையில் ரகளை; தப்பிக்க நினைத்து இருசக்கர வாகனத்தை வந்த வழியே திருப்பியவர் மரத்தில் மோதி உயிரிழந்த சோகம்

செய்திக்கொத்து சாலையில் ரகளை; தப்பிக்க நினைத்து இருசக்கர வாகனத்தை வந்த வழியே திருப்பியவர் மரத்தில் மோதி உயிரிழந்த சோகம்

3 mins read

புதுவை: சாலை­யில் சென்ற வாக­னங்­களை மறித்து ரக­ளை­யில் ஈடு­பட்­ட­வர்­கள் தன்­னை­யும் தாக்­கக்­கூ­டும் என்ற பயத்­தில் தான் வந்த இரு­சக்­கர வாக­னத்தைத் திருப்­பிச் சென்ற இளை­யர் மரத்­தில் மோதி உயி­ரி­ழந்­தார்.

இந்­தச் சம்­ப­வம் புது­வை­யில் நள்­ளி­ரவு வேளை­யில் நிகழ்ந்­துள்­ளது. அங்­குள்ள முத்­துப்­பிள்­ளை­பா­ளை­யம் பகு­தி­யைச் சேர்ந்த பொறி­யி­யல் பட்­ட­தா­ரி­யான 26 வயது விஷால் நேற்று முன்­தி­னம் நள்­ளி­ரவு வேளை­யில் கடற்­கரை நோக்கி தமது இரு­சக்­கர வாக­னத்­தில் சென்று கொண்­டி­ருந்­தார்.

அப்­போது சில இளை­யர்­கள் அவ்­வ­ழியே சென்ற வாக­னங்­களை மறித்து ரக­ளை­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

அவர்­களில் ஒரு­வர் விஷா­லைத் தாக்­கு­வ­து­போல் தனது கைகளை உய­ரத் தூக்­கி­ய­தால் அவர் அதிர்ந்து போனார்.

ரகளை செய்­த­வர்­க­ளி­டம் இருந்து தப்­பிக்க உட­ன­டி­யாக தனது இரு­சக்­கர வாக­னத்தை தாம் வந்த வழியே திருப்பி அங்­கி­ருந்து வேக­மா­கப் புறப்­பட்­டார் விஷால்.

ஆனால், வேக­மா­கச் சென்­ற­தால் சற்றே நிலை­த­டு­மா­றி­ய­தில், அவர் சென்ற வாக­னம் சாலை­யோர மரத்­தில் பல­மாக மோதி­யது. இதில் தூக்­கி­வீ­சப்­பட்ட விஷால் படு­கா­ய­ம­டைந்­தார்.

பின்­னர் பொது­மக்­கள் உத­வி­யோடு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட அவர், சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­து­விட்­டார்.

இத­னி­டையே, விஷாலைப் பய­மு­றுத்­தும் வகை­யில் செயல்­பட்­ட­தாக விபத்து நிகழ்ந்த இரவு ரக­ளை­யில் ஈடு­பட்ட ஐந்து பேர் மீது வழக்­குப்­ப­தி­வாகி உள்­ளது.

இந்­நி­லை­யில் இரு­சக்­கர வாக­னத்­தில் வேக­மா­கச் சென்ற விஷால், மரத்­தில் மோதி விபத்­துக்­குள்­ளான காட்சி அப்­ப­கு­தி­யில் உள்ள கண்­கா­ணிப்­புக் கரு­வி­களில் பதி­வாகி இருந்­தது.

விலை வீழ்ச்சி: தக்காளிச் செடிகளை டிராக்டர் ஏற்றி அழிக்கும் விவசாயிகள்

தர்மபுரி: தக்காளிக் கொள்முதல் விலை வீழ்ச்சி கண்டதை அடுத்து திருப்பூர் மாவட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனையடுத்து, பல்லடம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட தக்காளிச் செடிகளை விவசாயிகள் பலர் டிராக்டர் ஏற்றி அழித்து வருகின்றனர். ஒரு கிலோ தக்காளிக்குச் சந்தையில் பத்து ரூபாய் மட்டுமே கிடைக்கிறது என்றும் 22 ரூபாய் கிடைத்தால் மட்டுமே குறைந்தபட்ச லாபம் பெற முடியும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரிப்பதும் விலை வீழ்ச்சிக்குக் காரணம் என அவர்களால் சுட்டிக்காட்டப் படுகிறது.

ஓடும் பேருந்திலிருந்து இறங்க முயன்றதால் இழப்பீடு 50% குறைப்பு

சென்னை: பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறு வனுக்கு அளிக்கப்பட வேண்டிய ஈழப்பீட்டுத் தொகையில் 50 விழுக்காட்டை கழிக்க வேண்டும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த 14 வயதான ஆகாஷ் என்ற சிறுவன் ஓடும் பேருந்தில் இருந்து கீழே இறங்க முயற்சி செய்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தான். இதையடுத்து ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி சிறுவனின் பெற்றோர் விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர். இம்மனு மீதான விசாரணையின்போது, பேருந்து நகரும் வேளையில் ஆகாஷ் அதிலிருந்து இறங்க முற்பட்டதால்தான் விபத்து நிகழ்ந்தது என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி, ஓடும் பேருந்தில் இருந்து இறங்குவது மாணவர் களுக்கு வழக்கமாகிவிட்டது என்றும் சிறுவன் ஆகாஷும் அதேபோன்று செயல்பட்டதால் இழப்பீட்டுத் தொகையில் 50% கழிக்கப்படும் என்றும் தீர்ப்பளித்தார்.

கிரிக்கெட் விளையாடிய இளையர் திடீரென மயங்கி விழுந்து மரணம்

சென்னை: கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது இளையர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். சென்னைக்கு அருகே உள்ள புழல் பகுதியில் தனியார் விளையாட்டுத் திடலில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நேற்று முன்தினம் இரவு ஸ்ரீதர் (35 வயது) என்பவர் தன் நண்பர்களுடன் தனியார் திடலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை நண்பர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும் அவர் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடலோரம் ஒதுங்கிய சாமி சிலைகள்

நாகை: மயிலாடுதுறை அருகே கடற்கரையில் ஒதுங்கிய மூன்று கற்சிலைகளைக் காவல்துறை மீட்டது. அப்பகுதி மீனவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை கடலோரப் பகுதியில் அச்சிலைகளைக் கண்டனர். இதனையடுத்து, சீர்காழி வட்டாட்சியரும் காவல்துறையினரும் விரைந்து சென்று அச்சிலைகளைப் பார்வையிட்டு பறிமுதல் செய்தனர். அவற்றை தொல்லியல்துறை நிபுணர்கள் ஆய்வு செய்யவுள்ளனர்.