துரத்தி துரத்திக் கடிக்கும் நாய்கள்; பலர் பாதிப்பு

1 mins read

சென்னை: சென்­னை­யில் தெரு­நாய்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. இதன் கார­ண­மாக நாய்க்­க­டி­க்கு சிகிச்­சைக்கு நாடுவோரின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்து வரு­கிறது.

சென்­னை­யில் நாய்க்­க­டி­யால் பாதிக்­கப்­பட்டு இரண்டு பெரிய மருத்­து­வ­ம­னை­களில் மட்­டும் தின­மும் 15 பேர் வரை ரேபிஸ் தடுப்­பூசி போட வரு­கி­றார்­கள். பெரும்­பா­லும் குழந்­தை­களே நாய்க்­க­டி­யால் அதி­கம் பாதிக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

எழும்­பூ­ரில் உள்ள அரசு குழந்­தை­கள் நல மருத்­து­வ­ம­னை­யில் ரேபிஸ் தடுப்­பூசி போட மாதம் 20 குழந்­தை­கள் வரு­கி­றார்­கள்.

சென்னை ராஜீவ்­ காந்தி அரசு பொது மருத்­து­வ­ம­னை­யில் கடந்த ஆண்டு மட்­டும் 6,261 டோஸ் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. அங்கு தின­மும் 5 பேர் நாய்க்­கடி சிகிச்­சைக்கு வரு­கி­றார்­கள்.

ஸ்டான்லி அரசு மருத்­து­வ­ம­னை­யில் ஒரு மாதத்­தில் 1,500 டோஸ் ரேபிஸ் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. இங்கு தின­மும் 10 பேர் நாய்க்­க­டிக்கு சிகிச்சை பெற வரு­கி­றார்­கள்.

ஓமந்­தூ­ரார் மருத்­து­வ­ம­னை­யில் கடந்த ஆண்டு 1,385 முறை ரேபிஸ் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.