நரேஷ் குப்தா காலமானார்

நரேஷ் குப்தா காலமானார்

1 mins read
cad2c3db-7998-48e6-8609-81bb96ad8492
-

சென்னை: தமி­ழ­கத்­தின் முன்­னாள் தலைமைத் தேர்­தல் அதி­காரி நரேஷ் குப்தா (படம்) உடல்நலக் குறை­வால் சென்னையில் கால­மா­னார். அவருக்கு வயது 73.

ஐஏ­எஸ் அதி­கா­ரி­யான அவர், கடந்த 1998ம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை­யி­லும் அதன் பிறகு 2005ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை­யும் தலை­மைத் தேர்­தல் அதி­கா­ரி­யாகப் பணி­யாற்­றி­னார்.

2006ஆம் ஆண்டு தமி­ழக சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல், 2009ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­தல்­களை தமி­ழ­கத்­தில் வெற்­றி­க­ர­மாக நடத்­திக்­காட்­டி­னார் நரேஷ் குப்தா. இவை தவிர, தமி­ழ­கத்­தில் 12 இடைத்­தேர்­தல்­களை சர்ச்­சை­யின்றி நடத்­தி­னார்.

உத்­த­ரப் பிர­தேச மாநி­ல­த்­தைச் சேர்ந்த அவர், அங்கு செல்ல மன­மின்றி தமி­ழ­கத்­தி­லேயே தங்­கி­விட்­டார். அதி­கா­ரி­க­ளுக்­கான குடி­யி­ருப்­பில் வசித்து வந்த அவ­ரது உடல்­நிலை கடந்த 5ஆம் தேதி திடீ­ரென பாதிக்­கப்­பட்­டது. சிகிச்சை பலனளிக்காமல் அவர் கால­மா­னார்.