புதுவையில் மாநிலக் கட்சி அங்கீகாரத்தை இழந்த பாமக; இந்திய கம்யூனிஸ்ட் இனி தேசிய கட்சியல்ல

புதுவையில் மாநிலக் கட்சி அங்கீகாரத்தை இழந்த பாமக; இந்திய கம்யூனிஸ்ட் இனி தேசிய கட்சியல்ல

2 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் முக்­கிய அர­சி­யல் கட்­சி­யா­கத் திக­ழும் பாட்­டாளி மக்­கள் கட்சி (பாமக) புது­வை­யில் மாநிலக் கட்சி எனும் அங்­கீ­கா­ரத்தை இழந்­துள்­ளது.

இதே­போல் பல்்வேறு மாநி­லங்­களில் மேலும் பல முக்­கிய கட்சி­கள் இவ்­வாறு மாநி­லக் கட்சி எனும் அந்­தஸ்தை இழந்­தி­ருப்­பது சம்­பந்­தப்­பட்ட கட்­சி­க­ளின் தொண்­டர்­கள் மத்­தி­யில் ஏமாற்றத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

பல்­வேறு விதி­மு­றை­கள், தகுதி­க­ளின் அடிப்­ப­டை­யில் பதிவு செய்­யப்­பட்ட அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு, மத்­திய தேர்­தல் ஆணை­யம் மாநில, தேசிய கட்­சி­கள் என்ற அங்­கீ­கா­ரத்தை வழங்கு­கிறது.

அவ்­வப்­போது இதே அடிப்படை­யில் அத்­த­கைய அங்­கீ­கா­ரத்தைத் தேர்­தல் ஆணை­யம் ரத்து செய்­தும் அறி­விப்­பு­களை வெளி­யி­டும்.

அந்த வகை­யில் திரி­ணாமூல் காங்­கி­ரஸ், தேசி­ய­வாத காங்­கிரஸ், இந்­திய கம்­யூ­னிஸ்ட் ஆகி­யவை தேசிய கட்­சி­க­ளுக்­கான அங்­கீ­கா­ரத்தை இழந்­துள்ளன.

இது தொடர்­பாகத் தேர்­தல் ஆணை­யம் திங்­கட்­கி­ழமை வெளி­யிட்ட அறிக்­கை­யில், ஆம் ஆத்மி கட்­சியை தேசிய கட்­சி­யாக அங்­கீ­க­ரித்­துள்­ளது.

ஆந்­தி­ரா­வில் பிஆர்­எஸ் கட்சி, உத்­த­ரப் பிர­தே­சத்­தில் ஆர்­எல்டி கட்­சி­களும் தேர்­தல் களத்­தில் சாதிக்­கா­த­தால் அவற்­றின் மாநி­லக் கட்சி என்ற அங்­கீ­கா­ரத்தை இழந்­துள்­ளன.

தற்­போது காங்­கி­ரஸ், பாஜக, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட், பகு­ஜன் சமாஜ், தேசிய மக்­கள் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய ஆறு கட்­சி­கள் மட்­டுமே தேர்­தல் ஆணை­யத்­தால் தேசிய கட்­சி­க­ளாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

இதற்­கி­டையே புதுவை மாநி­லத்­தில் கடந்த 2011 முதல் 2021 வரை நடை­பெற்ற தேர்­தல்­களில் பாமக குறிப்­பி­டத்­தக்க வெற்­றி­களைப் பெற­வில்லை.

மேலும் குறிப்­பிட்ட விழுக்­காடு அள­வுக்கு வாக்­கு­க­ளையும் பெற­வில்லை. இதை­ய­டுத்து பாம­க­வின் மாநிலக் கட்சி அங்­கீ­கா­ரம் ரத்து செய்­யப்­பட்­ட­தாகத் தேர்­தல் ஆணை­யம் கூறி­யுள்­ளது.

புது­வை­யில் ஆட்­சி­யைப் பிடிக்க வேண்­டும் அக்­கட்­சி­யின் நடப்­புத் தலை­வர் அன்­பு­ம­ணியை முதல்­வ­ராக்க வேண்­டும் என்­பதே பாமக தலை­மை­யின் கடந்த கால விருப்­ப­மா­க­வும் வியூ­க­மா­க­வும் இருந்­தது.

அத­னால் புதுவை அர­சி­யல் களத்­தில் அக்­கட்சி தீவி­ர­மாக இயங்கி வந்­தது.

இந்­நி­லை­யில், புது­வை­யில் மாநி­லக் கட்சி எனும் அங்­கீ­கா­ரத்தை இழந்­துள்­ளது பாமக தொண்­டர்­களை சோகத்­தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

அடுத்த தேர்தலில் புதுவையில் பாமகவுக்கு அதன் மாம்பழச் சின்னம் ஒதுக்கப்படுவதும் கேள்விக்குறியாகி உள்ளது.