கலாஷேத்ராவில் மனித உரிமை ஆணையம் விசாரணை

கலாஷேத்ராவில் மனித உரிமை ஆணையம் விசாரணை

1 mins read

சென்னை: கலா­ஷேத்ரா கல்­லூ­ரி­யில் மாண­வி­க­ளுக்குப் பாலி­யல் தொல்லை கொடுக்­கப்­பட்­ட­தாக எழுந்­துள்ள புகார்­கள் குறித்து நேற்று மாநில மனித உரி­மை­கள் ஆணை­யம் விசா­ரணை மேற்­கொண்­டது.

பாலி­யல் தொல்லை தொடர்­பாக அக்­கல்­லூ­ரி­யில் பணி­யாற்­றும் ஹரி பத்­மன் என்ற பேரா­சி­ரி­யர் கைதாகி உள்­ளார். அவ­ரி­டம் தீவிர விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.

இந்­நி­லை­யில், கலா­ஷேத்ரா கல்­லூ­ரிக்கு ஆத­ர­வா­க­வும் எதி­ரா­க­வும் பலர் கருத்து தெரி­வித்து வரு­கின்­றனர். பாரம்­ப­ரி­ய­மிக்க கல்­லூரி என்­ப­தால் புதி­தாக வெடித்­துள்ள சர்ச்சை குறித்து தென் மாநில மக்­கள் பர­வ­லாக விவா­தித்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், பாலி­யல் தொல்லை விவ­கா­ரம் தொடர்­பாக தமி­ழக ஊட­கங்­களில் வெளி­யான பல்வேறு செய்­திகளை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு, தமிழ்­நாடு மாநில மனித உரி­மை­கள் ஆணை­யம் தாமாக முன்­வந்து வழக்­கு ஒன்றைப் பதிவு செய்­துள்­ளது.

இதை­ய­டுத்து பாலி­யல் தொல்லை தொடர்­பான புகார்­கள் குறித்து ஆறு வாரங்­க­ளுக்­குள் விசா­ரணை நடத்தி அறிக்கை தாக்­கல் செய்ய வேண்­டும் என்று அந்த ஆணை­யம் காவல்துறைக்கு உத்­த­ர­வி­ட்­டுள்­ள­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

மாநில மனித உரிமை ஆணை­யம் விரி­வான விசா­ர­ணைக்­குப் பின்­னர் அது தொடர்­பான அறிக்­கையைத் தமி­ழக அர­சி­டம் அளிக்­கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.