கிண்டியில் புதிய பன்னோக்கு மருத்துவமனை

கிண்டியில் புதிய பன்னோக்கு மருத்துவமனை

1 mins read

சென்னை: கிண்­டி­யில் கிங் நிறு­வன வளா­கத்­தில் ரூ.230 கோடி மதிப்­பில் புதிய பன்­னோக்கு சிறப்பு மருத்­து­வ­மனை கட்­டப்­ப­டு­கிறது.

ஏறத்­தாழ ஐந்து ஏக்­கர் பரப்­ப­ள­வில் அமை­யும் புதிய மருத்­து­வ­மனை இவ்­வாண்டு ஜூன் மாதம் திறக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கடந்த ஆண்டு ஏப்­ரல் 1ஆம் தேதி அதற்­கான கட்­டு­மானப் பணி­கள் தொடங்­கின.

ஆறு தளங்­கள் கொண்ட மருத்­து­வ­ம­னை­யில் நோயா­ளி­க­ளுக்­கான ஆயி­ரம் படுக்­கை­கள் இடம்­பெற்­றி­ருக்­கும் எனக் கூறப்­பட்­டது.

அடுத்த மாதம் 15ஆம் தேதிக்­குள் கட்­டு­மா­னப் பணி­கள் நிறை­வ­டை­யும் என்று தெரி­கிறது.

நேற்று முன்­தி­னம், மாநி­லப் பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சர் எ.வ.வேலு, மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் இரு­வ­ரும் மருத்­து­வ­ம­னைக் கட்­டு­மா­னப் பணி­க­ளைப் பார்­வை­யிட்­ட­னர்.

அவ­சர அறுவை சிகிச்சை அரங்­கம், மருத்­துவ வாயுக் குழாய்­கள் போன்­றவை அமைக்­கப்­ப­டு­வதை அவர்­கள் பார்­வை­யிட்­ட­னர்.

கட்­டு­மா­னப் பணி­களை குறித்த காலத்­தில் நிறை­வேற்­றும்­படி அதி­கா­ரி­க­ளுக்கு அமைச்­சர்­கள் இரு­வ­ரும் அறி­வுரை கூறி­னர்.

முன்­னாள் முதல்­வர் கருணா நிதி­யின் நூற்­றாண்டு விழாவை முன்­னிட்டு, புதிய மருத்­து­வ­மனை திறந்து வைக்­கப்­படும் எனக் கூறப்­பட்­டது.

புதிய மருத்­து­வ­ம­னைக்­குப் பெயர் சூட்­டு­வது, திறக்­கப்­படும் தேதி இரண்­டை­யும் முதல்­வர் ஸ்டா­லின் முடிவு செய்­வார் என்று அமைச்­சர்­கள் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னர்.