அமைச்சர் உதயநிதி: ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு அரங்கம்

அமைச்சர் உதயநிதி: ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு அரங்கம்

1 mins read

சென்னை: தமி­ழ­கத்­தின் அனைத்­துத் தொகு­தி­க­ளி­லும் விளை­யாட்டு அரங்­கங்­கள் அமைக்­கப்­படும் என்று இளை­ஞர் நலன், விளை­யாட்டு மேம்­பாட்­டுத் துறை அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டா­லின் அறி­வித்­துள்­ளார்.

"ஏற்­கெ­னவே 61 தொகு­தி­களில் விளை­யாட்­ட­ரங்­கங்­கள் உள்­ளன. எஞ்­சிய 173 தொகு­தி­க­ளி­லும் விளை­யாட்டு அரங்­கம் அமைக்­கப்­படும். முதற்­கட்­ட­மாக கொளத்­தூர், சேப்­பாக்­கம் உள்­ளிட்ட 10 தொகு­தி­களில் சிறிய விளை­யாட்­ட­ரங்­கு­கள் அமைக்­கப்­படும்," என்று அவர் கூறி­னார்.

புதி­தாக உரு­வாக்­கப்­பட்ட ஆறு மாவட்­டங்­களில் ரூ.90 கோடி­யில் அனைத்து வச­தி­க­ளு­டன் கூடிய மாவட்ட விளை­யாட்டு வளா­கங்­கள் நிறு­வப்­படும்.

சென்­னை­யின் ஐந்து முக்­கிய விளை­யாட்­ட­ரங்­கு­கள் ரூ.25 கோடி­யில் மறு­சீ­ர­மைப்பு செய்து மேம்­ப­டுத்­தப்­படும் என்­றும் அவர் சொன்­னார்.

சென்னை நேரு விளை­யாட்டு அரங்­கில் ரூ.3 கோடி­யில் விளை­யாட்டு அறி­வி­யல் மையம் நிறு­வப்­படும் என்றும் அனைத்து ஊராட்சிகளுக்கும் ரூ.42 கோடியில் விளையாட்டுக் கருவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.