தாம்பரம் மாநகராட்சியில் முழுமையான பாதாளச் சாக்கடைத் திட்டம்

தாம்பரம் மாநகராட்சியில் முழுமையான பாதாளச் சாக்கடைத் திட்டம்

1 mins read

சென்னை: தாம்­ப­ரம் மாந­க­ராட்­சி­யில் இணைக்­கப்­பட்ட நக­ராட்­சி­கள், பேரூ­ராட்­சி­கள், 15 ஊராட்­சி­க­ளுக்­கும் சேர்த்து முழு­மை­யான பாதா­ளச் சாக்­கடை வசதி ஏற்­ப­டுத்த விரி­வான திட்ட அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தாக அமைச்­சர் கே.என்.நேரு தெரி­வித்­தார்.

"தாம்­ப­ரம் மாந­க­ராட்­சி­யில் பல்­லா­வ­ரம் பகு­தி­யில் பாதாள சாக்­கடை திட்­டம் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. பம்­மல், அன­கா­புத்­தூர் பகு­தி­களில் ரூ.211.15 கோடி மதிப்­பில் பாதாள சாக்­கடை பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன," என்று அவர் குறிப்­பிட்­டார்.

இத்­திட்­டம் அடுத்­தாண்டு பிப்­ர­வரி மாதத்­தில் நிறை­வ­டை­யும் என்­றார் அவர்.

நக­ரங்­களில் உள்ள நீர்­நி­லை­களை குடி நீருக்கு உகந்­த­வை­யாக மேம்­ப­டுத்­த­ நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

நக­ரின் அனைத்­துப் பகு­தி­க­ளி­லும் கழி­வு­நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யம் அமைக்­க­வும் உள்­கட்­ட­மைப்பு வசதி ஏற்­ப­டுத்­த­வும் சென்னை குடி­நீர் வாரி­யம் மூலம் விரி­வான திட்­ட­அ­றிக்கை தயா­ரிக்­கப்­படும் என்று அமைச்­சர் நேரு கூறி­னார்.