தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கலாஷேத்ரா: முப்பது மாணவிகளிடம் விசாரணை

1 mins read
e66b099c-edc2-42bb-bc41-2740293a91a9
-

சென்னை: கலா­ஷேத்ரா கல்­லூரி­யில் முப்­பது மாண­வி­க­ளி­டம் மாநில மனித உரி­மை­கள் ஆணை­யத்­தைச் சேர்ந்த அதி­காரி­கள் தீவிர விசா­ரணை மேற்­கொண்­ட­னர்.

அதன் பின்­னர் கல்­லூ­ரி­யில் ஏதே­னும் பாலி­யல் தொல்லை உள்­ளிட்ட பிரச்­சி­னை­கள் எழுந்­தால் மாண­வி­கள் உட­ன­டி­யாகப் புகார் அளிக்க புதிய தொலை­பேசி எண்­ணை­யும் அந்த ஆணை­யத்­தின் அதி­கா­ரி­கள் வழங்­கி­னர்.

கலா­ஷேத்ரா விவ­கா­ரம் குறித்து விசா­ரணை நடத்த ஐந்து பேர்­கொண்ட குழுவை அமைத்­துள்­ளது மாநில மனித உரி­மை­கள் ஆணை­யம்.

இந்­தக் குழு­வின் உறுப்­பி­னர்­கள் கலா­ஷேத்ரா கல்­லூ­ரி­யின் இயக்­கு­நர் ரேவதி ராமச்­சந்­தி­ரன், துணை இயக்­கு­நர், கல்­லூரி முதல்­வர் உள்­ளிட்ட ஆறு பேரி­டம் விசா­ரணை நடத்தி உள்­ள­னர்.

மேலும் நேற்று முன்­தி­னம் கல்­லூரி வளா­கத்­தில் வைத்து முப்­பது மாண­வி­க­ளி­டம் விசா­ரணை மேற்­கொண்டு பல்­வேறு தக­வல்­க­ளைப் பெற்­றுள்­ள­னர்.

இந்த விசா­ரணை சுமார் ஒருமணி நேரம் நீடித்­தது என்­றும் மாண­வி­கள் எது­கு­றித்­தும் இனி அஞ்­சத் தேவை­யில்லை என்று அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­க­வும் தகவல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே, கலா­ஷேத்ரா விவ­கா­ரம் தொடர்­பாக இந்­திய மாதர் தேசிய சம்­மே­ள­னம் நாளை போராட்­டம் நடத்­தப் போவ­தாக அறி­வித்துள்ளது.

மாண­வி­க­ளுக்­குப் பாலியல் தொல்லை கொடுத்­த­வர்­களுக்குச் சட்­டப்­படி தண்­டனை பெற்­றுத்­தர வேண்டும் இது தொடர்பாக தமி­ழக அரசு உரிய நட­வ­டிக்கைகளை மேற்­கொள்ள வேண்­டும் என அச்­சம்மே­ள­னம் வலி­யு­றுத்தி உள்­ளது.