சென்னை: விளையாட்டுத் துறையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவற்றுள் ஒன்றாக 'தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை' தொடங்கப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த அறக்கட்டளையின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என்றும் விளம்பரத் தூதுராக கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி நியமிக்கப்பட உள்ளார் என்றும் அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது குறிப்பிட்டார்.
"புதிய அறக்கட்டளைக்கு என தனி இலச்சினை, தனிப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளன. பெருநிறுவன, பொதுமக்களுடன் இணைந்து சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்படும் என்றும் முதற்கட்டமாக மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி மேலும் தெரிவித்தார்.

