ஆளுநர்: தமிழ் பழமையான மொழி; இந்தியை திணிக்க இயலாது

ஆளுநர்: தமிழ் பழமையான மொழி; இந்தியை திணிக்க இயலாது

1 mins read

சென்னை: தமிழ் மொழி மீது இந்தி உள்­பட எந்த மொழி­யை­யும் திணிக்க இய­லாது என்று தமி­ழக ஆளு­நர் ஆர்.என்.ரவி தெரி­வித்­துள்­ளார்.

தமிழ் மொழி பேசும் பனா­ரஸ் பல்­க­லைக்­க­ழக மாணவ, மாணவி­க­ளு­டன் அவர் கலந்துரை­யா­டல் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்றுப் பேசி­ய­போது இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

"இந்­தி­யை­விட தமிழ் மொழி மிக­வும் பழமை வாய்ந்­தது. சுமசுகிரு­தம் மட்­டுமே தமி­ழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி.

"பிற­மொ­ழி­க­ளைப் பேசு­ப­வர்­களும்­கூட தமிழ் மொழி, தமிழ் இலக்­கி­யத்­தைக் கற்­றுக்­கொள்ள நினைப்­பது மிகுந்த மகிழ்ச்­சி­யைத் தரு­கிறது," என்­றார் ஆளு­நர் ஆர்.என்.ரவி.

இந்­தி­யா­வின் ஆன்­மிக, கலா­சாரத் தலை­ந­க­ராக தமிழ்­நாடு விளங்கி வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், தமிழ்­நாட்­டுக்கு 3,500 ஆண்­டு­க­ளுக்கு மட்­டு­மல்ல அதற்­கும் முந்­தைய வர­லாறு உண்டு என்­றும் கூறினார்.

மாண­வர்­கள் தமிழை ஆழமாகப் படிக்க வேண்­டும் என்­றும் அதன் மூலம் தமி­ழில் அறி­ஞர்­க­ளாக மாற­வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

"திருக்­கு­றள் மனித சமூ­கத்­திற்கு தேவை­யான அனைத்து கருத்­து­க­ளை­யும் வழங்­கும் நூல். திருக்­கு­றளை ஆழ­மாக அனை­வரும் பயில வேண்­டும்.

"திருக்­கு­றள் போல் தமி­ழில் பல இலக்­கி­யங்­கள் உள்­ளன," என்று ஆளு­நர் ரவி மேலும் வலி­யு­றுத்­தினார்.