சென்னை: கால நிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ஆயிரம் குறுங்காடுகள் உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ் மொழியைச் சிறப்பிக்கும் வகையில் நிலவில் இருந்து பார்த்தாலும் 'தமிழ்' என்ற வார்த்தை தெரியும் வகையில் நூறு ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். காலநிலைக்கேற்ற வாழ்வியல் முறை என்ற திட்டம் ரூ.50 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.

