ராமேசுவரம்: சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் பிறவியிலேயே கைகால்களின் செயல்பாட்டில் குறைபாடுள்ள, மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியாவார்.
தனது அன்றாடத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ள இயலாத தங்கள் மகனுக்கு நான்கு வயதிலேயே நீச்சல் கற்றுத் தந்தனர் ஸ்ரீராமின் பெற்றோர்.
அதன் பிறகு பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு அவர் சாதிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில், தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலான பாக் நீரிணை கடல் பரப்பை நீந்திக் கடந்துள்ளார் ஸ்ரீராம். மொத்தம் 32 கிலோ மீட்டர் தூரமுள்ள அந்தக் கடற்பகுதியை நீந்திக் கடந்த அவருக்கு 20 மணி நேரம் தேவைப்பட்டது.
அவரது இந்தச் சாதனையை ராமேசுவரம் காவல் துணை கண்காணிப்பாளர் உமா தேவி உட்பட பலர் பாராட்டி உள்ளனர்.

