பிரதமர் மோடி: உலகின் பழைமையான மொழி தமிழ் என்பதில் இந்தியர்கள் பெருமைகொள்ள வேண்டும்

பிரதமர் மோடி: உலகின் பழைமையான மொழி தமிழ் என்பதில் இந்தியர்கள் பெருமைகொள்ள வேண்டும்

2 mins read

புது­டெல்லி: உல­கின் பழை­மை­யான மொழி தமிழ் என்­ப­தில் ஒவ்­வோர் இந்­தி­ய­ரும் பெருமை கொள்ள வேண்­டும் என்று பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­து இருக்கிறார்.

காஞ்­சி­பு­ரம் மாவட்­டத்­தில் உள்ள உத்­தி­ர­மே­ரூர் பகு­தி­யில் கண்­டெ­டுக்­கப்­பட் 1,200 ஆண்­டு­கள் பழை­மை­வாய்ந்த கல்­வெட்­டு­கள் ஜன­நா­யக மதிப்­பீ­டு­கள் குறித்த அம்­சங்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தாக குறிப்­பிட்­டுள்­ளார்.

சித்­தி­ரைப் புத்­தாண்டை முன்­னிட்டு, மத்­திய இணை அமைச்­சர் முரு­க­னின் புது­டெல்லி இல்­லத்­தில் நடை­பெற்ற கொண்­டாட்ட நிகழ்­வில் பிர­த­மர் மோடி கலந்­து­கொண்­டார்.

பட்டு வேட்டி, சட்டையணிந்து வந்த அவர், தமிழ் மொழி­யின் சிறப்பை தாம் நன்கு அறிந்­துள்ள கார­ணத்­தால்­தான் ஐநா அவை­யில் தமி­ழின் பெரு­மை­கள் பற்றி குறிப்­பிட்­ட­தாக தெரி­வித்­தார்.

"உல­கின் பழை­மை­யான ஜன­நா­ய­கம் மட்­டு­மல்ல, ஜன­நா­ய­கத்­தின் தாயும்­கூட இந்­தி­யா­தான். இதற்­குச் சான்­றாக பல்­வேறு வர­லாற்­றுக் குறிப்­பு­கள் உள்­ளன.

"அவற்­றுள் முக்­கி­ய­மான குறிப்பு ஒன்று தமி­ழ­கத்­தில் உள்­ளது.

"உத்­தி­ர­மே­ரூர் பகு­தி­யில் கண்­டெ­டுக்­கப்­பட்ட கல்­வெட்டு கிராம சபைக்­கான உள்­ளூர் அர­சி­ய­ல­மைப்பை விவ­ரிக்­கிறது. பேர­வையை எப்­படி நடத்த வேண்­டும், உறுப்­பி­னர்­க­ளைத் தேர்வு செய்­யும் முறை எப்­படி இருக்க வேண்­டும் என்று அக்­கல்­வெட்­டில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

"மேலும், ஓர் உறுப்­பி­னர் எப்­படி தகுதி நீக்­கம் செய்­யப்­ப­டு­வார் என்­ப­தற்­கான குறிப்­பு­களும் காணப்­ப­டு­கின்­றன," என்­றார் பிர­த­மர் மோடி.

காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி அண்­மை­யில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யில் இருந்து தகு­தி­நீக்­கம் செய்­யப்­பட்­டார். அதை மறை­மு­க­மாக குறிப்­பி­டும் வகை­யி­லேயே, பிர­த­மர் இவ்­வாறு பேசி­ய­தாக கரு­தப்­ப­டு­கிறது.

"உல­கின் எந்த நாட்­டுக்­குச் சென்­றா­லும் தமி­ழர்­க­ளைக் காண­லாம். எங்கு சென்­றா­லும் தமி­ழர்­கள் தங்­க­ளின் கலா­சா­ரம், பாரம்­ப­ரி­யங்­க­ளை­யும் எடுத்­துச் செல்­கி­றார்­கள். அத­னால்­தான் பொங்­கல், புத்­தாண்டு உள்­ளிட்ட தமிழ்ப் பண்­டி­கை­கள் உல­க­கெங்­கி­லும் கொண்­டா­டப்­ப­டு­கின்­றன.

"இலங்­கை­யில் யாழ்ப்­பா­ணத்­திற்­குப் பய­ணம் செய்த முதல் இந்­திய பிர­த­மர் நான்­தான். இலங்­கை­யில் உள்ள தமி­ழர்­கள் உத­விக்­கா­கக் காத்­தி­ருந்­த­னர்.

"அங்கு நான் பங்­கேற்ற நிகழ்ச்­சி­கள் தொடர்­பான காணொ­ளி­கள் தமி­ழ­கத்­தில் வெளி­யா­ன­போது தமிழ் மக்­க­ளி­டம் இருந்து நிறைய அன்­பைப் பெற்­றேன்," என்­றார் பிர­த­மர் மோடி.