சென்னை: நீர்நிலைகளைச் சிறப்பாக பாதுகாக்கின்ற, மேம்படுத்துகின்ற நூறு பேருக்கு முதல்வரின் நீர்நிலைப் பாதுகாவலர் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து விருது பெறுவோர் தேர்வு செய்யப்படுவர் என்றும் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் பேசும்போது சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
ஒரு கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.

