செயலிகளை உருவாக்கும் போட்டி: சென்னை காவல்துறை அறிவிப்பு

செயலிகளை உருவாக்கும் போட்டி: சென்னை காவல்துறை அறிவிப்பு

1 mins read

சென்னை: இணை­யம்வழி நடை­பெ­றும் மோச­டி­க­ளைத் தடுக்­கும் வகை­யில் புதிய செய­லி­களை உரு­வாக்­கி­னால் ஒரு லட்­சம் ரூபாய் பரிசு அளிக்­கப்­படும் என சென்னை காவல்­துறை அறி­வித்­துள்­ளது.

இதற்­காக 'சைபர் ஹேக்­கத்­தான்' என்ற தலைப்­பில் நடத்­தப்­படும் போட்­டி­யில் இளம் தொழில்­நுட்­பத் தக­வல் வல்­லு­நர்­கள் அதிக எண்­ணிக்­கை­யில் பங்­கேற்க வேண்­டும் என காவல்­துறை கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

இணைய (சைபர்) குற்­றங்­களைக் கண்­ட­றிய புதுச் செயலி­கள் தேவைப்­ப­டு­வ­தாக காவல்­துறை வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மின்­னி­லக்க (கிரிப்டோ கரன்சி) பணப் பரி­வர்த்­தனை தொடர்­பான விவ­ரங்­க­ளைக் கண்­ட­றி­தல், குறிப்­பிட்ட சொற்­களைக் கொண்டு சமூக ஊடகங்­களில் தொடர்­பு­டைய பதி­வு­களைத் தேடு­தல், கண்­காணிப்புக் கரு­வி­களில் பதி­வாகும் காட்­சி­களில் வழக்­கத்­திற்கு மாறா­கத் தென்­ப­டு­ப­வர்­கள் அல்­லது பொருள்­க­ளைக் கண்­ட­றிந்து தொடர்­பு­டைய அதி­கா­ரி­க­ளுக்குத் தக­வல் அனுப்­பு­தல் உள்­ளிட்ட ஐந்து வெவ்­வேறு பிரி­வு­களில் போட்­டி­களை நடத்த­உள்­ளது சென்னை காவல்­துறை.

இணைய குற்­றங்­க­ளைக் கண்­ட­றி­வ­தி­லும் தடுப்­ப­தி­லும் காவல்­துறை தீவி­ர­மாக உள்ளது என்றும் புதுச் செய­லி­கள் இந்த நட­வ­டிக்­கை­களில் முக்­கி­யப் பங்­க­ளிக்­கும் வகை­யில் இருக்க வேண்­டும் என்­றும் காவல்­துறை உயர் அதி­கா­ரி­கள் தெரி­வித்­தனர்.