பெரியகுளம் காவல் நிலையம் மீது தாக்குதல்; பதற்றம்

பெரியகுளம் காவல் நிலையம் மீது தாக்குதல்; பதற்றம்

2 mins read
c512b888-7ca7-40ff-b15f-60e055f737aa
-

தேனி: அம்­பேத்­கர் பிறந்­த­நாள் விழாவில் இரு தரப்­பி­னர் இடையே ஏற்­பட்ட மோதல் காரண­மாக தேனி மாவட்­டம் பெரி­ய­கு­ளம் பகு­தி­யில் பதற்­றம் நிலவி வரு­கிறது.

ஒரே சமூ­கத்­தைச் சேர்ந்த இரு பிரி­வி­னர் கல்­வீச்­சில் ஈடு­பட்­ட­னர். இதை­ய­டுத்து காவல்­து­றை­யி­னர் குவிக்­கப்­பட்­ட­து­டன் மோத­லில் ஈடு­பட்­ட­வர்­க­ளு­டன் காவல்­துறை அதி­கா­ரி­கள் சமா­தா­னப் பேச்­சு­வார்த்­தை­யி­லும் ஈடு­பட்­ட­னர்.

அம்­பேத்­கர் பிறந்­த­நாள் விழாவை­யொட்டி பெரி­ய­கு­ளம் பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லை­யில் வெள்­ளிக்­கிழமை மாலை ஒரே சமூ­கத்­தைச் சேர்ந்த இரு பிரி­வி­னர் இடையே திடீ­ரென மோதல் வெடித்­தது.

அம்பேத்கர் சிலைக்கு யார் முதலில் மரியாதை செலுத்துவது என்பது தொடர்பில் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இரு தரப்­பி­ன­ரும் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­டி­ருப்­ப­தாக கிடைத்த தக­வலை அடுத்து, காவல்­து­றை­யி­னர் அங்கு விரைந்­த­னர்.

இரு தரப்­பி­ன­ரை­யும் அழைத்து பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டது. அதை­ய­டுத்து அனை­வ­ரும் கலைந்து சென்­ற­னர்.

இந்­நி­லை­யில், இரு தரப்­பை­யும் சேர்ந்த சிலர் திடீ­ரென வட­கரை காவல் நிலை­யம் முன்பு குவிந்­த­னர்.

பின்னர் காவல் நிலை­யம் மீது கல்­வீசி தாக்­கு­தல் நடத்­தி­ய­தால் பரபரப்பு ஏற்­பட்­டது.

அங்கு நிறுத்­தப்­பட்­டி­ருந்த காவல் ஆய்வாளரின் வாக­னம், ஆம்­பு­லன்ஸ் ஆகி­ய­வற்றின் மீது நடத்­தப்­பட்ட தாக்குதலில் அவற்­றின் கண்­ணா­டி­கள் உடைந்து சித­றின.

மேலும், பெரி­ய­கு­ளம் புதிய பேருந்து நிலை­யம் அருகே அர­சுப் பேருந்­தின் கண்­ணா­டி­யை­யும் சிலர் உடைத்­த­னர்.

பதற்­றம் அதி­க­ரித்­ததை அடுத்து, தேனி மாவட்ட காவல்­துறை கண்­காணிப்­பா­ளர் உமேஷ் பிர­வீன் சம்பவ இடத்­திற்கு விரைந்து சென்று பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளைப் பலப்­ப­டுத்த உத்­த­ர­விட்­டார்.

பெரி­ய­கு­ளம் பகு­தி­யில் தொடர்ந்து பதற்­றம் நீடித்து வரு­வதா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.