மனைவியைக் கொன்ற கணவன் வீட்டின் முன் சடலம் அடக்கம்; பாடம் புகட்டிய உறவினர்கள்

மனைவியைக் கொன்ற கணவன் வீட்டின் முன் சடலம் அடக்கம்; பாடம் புகட்டிய உறவினர்கள்

1 mins read
de864463-2154-4084-985d-c395b18a7526
-

குமரி: திரு­ம­ண­மான எட்டு மாதங்­களில் மனை­வியை கத்­தி­யால் குத்­திக் கொன்ற கண­வரை நாகர்­கோ­வில் காவல்­துறை கைது செய்­துள்­ளது.

பள்­ளி­யாடி பகு­தி­யைச் சேர்ந்த சேம் மரி­ய­தா­சுக்­கும் 23 வய­தான ஜெனி­லா­வுக்­கும் எட்டு மாதங்­க­ளுக்கு முன்பு திரு­ம­ணம் நடை­பெற்­றது. அதன் பின்­னர் கண­வர் வீட்­டா­ரு­டன் பெங்­க­ளூ­ரில் வசித்து வந்­தார் ஜெனிலா.

இந்­நி­லை­யில் சேம் மரி­ய­தா­சுக்­கும் வேறொரு பெண்­ணுக்­கும் தொடர்பு இருப்­பதை அறிந்து ஜெனிலா அதிர்ச்சி அடைந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இத­னால் கண­வன், மனைவி இடையே அடிக்­கடி வாக்­கு­வா­தம் மூண்­டுள்­ளது. இந்­நி­லை­யில், கடந்த 11ஆம் தேதி இரவு வீட்­டில் அயர்ந்து தூங்­கிக் கொண்­டி­ருந்த ஜெனி­லாவை கத்­தி­யால் குத்தி கொலை செய்­தார் சேம் மரி­ய­தாஸ். மறு­நாள் அவர் காவல்­து­றை­யால் கைது செய்­யப்­பட்­டார்.

இதற்­கி­டையே, உடல் கூராய்­வுக்­குப் பின்­னர் ஜெனி­லா­வின் உடல் அவ­ரது குடும்­பத்­தா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

மரி­ய­தாஸ் மீது கடும் கோபத்­தில் இருந்த ஜெனி­லா­வின் உற­வி­னர்­கள் அவ­ரது உடலை பெங்­க­ளூ­ரில் அடக்­கம் செய்­யா­மல் மரி­ய­தா­சின் சொந்த ஊரான திப்­பி­ர­ம­லைக்கு கொண்டு வந்­த­னர். பின்­னர் மரி­ய­தாஸ் வீட்டு வாச­லில் ஜெனிலா உடல் அடக்­கம் செய்­யப்­பட்­டது. மரி­ய­தா­சுக்­கும் அவ­ரது குடும்­பத்­தா­ருக்­கும் பாடம் கற்­பிக்­கும் வகை­யில் இவ்­வாறு செய்­த­தாக ஜெனிலா தரப்­பில் கூறப்­பட்­டது.

இறு­திச்­ச­டங்­கின்­போது காவல்­து­றை­யி­னர் குவிக்­கப்­பட்டனர்.