தமிழ் உள்பட 15 மொழிகளில் தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு

தமிழ் உள்பட 15 மொழிகளில் தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு

1 mins read

சென்னை: உள்­துறை அமைச்­சின் கீழ் செயல்­பட்டு வரும் மத்­திய ரிசர்வ் காவல் படை­யில் உள்ள பணி­யி­டங்­களை நிரப்­பு­வ­தற்­கான தேர்வு தமிழ் உள்­ளிட்ட 15 மொழி­களில் நடத்­தப்­படும் என மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

முன்­ன­தாக, இத்­தேர்வு ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழி­களில் மட்­டுமே நடத்­தப்­படும் என கூறப்­பட்­டது. இதற்கு தமி­ழ­கத்­தில் கடும் எதிர்ப்பு கிளம்­பி­யது. மத்­திய அர­சின் இந்த நிலைப்­பாட்டை எதிர்த்து போராட்­டம் நடத்­தப்­படும் என அமைச்­சர் உத­ய­நிதி அறி­வித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், ஆயு­தப்­ப­டை­யில் உள்ள பணி­யி­டங்­களை நிரப்­பு­வ­தற்­கான தேர்வு இந்தி, ஆங்­கி­லம் மட்­டு­மின்றி தமிழ் உள்­பட 15 மொழி­களில் நடத்­தப்­படும் என மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா அறி­வித்­துள்­ளார்.

இந்த அறி­விப்பை வர­வேற்றுள்ள பிரதமர் மோடி, கனவுகளை நிறைவேற்ற மொழி தடையாக இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.