மதுரை மெட்ரோ: மண் பரிசோதனை தொடக்கம்

மதுரை மெட்ரோ: மண் பரிசோதனை தொடக்கம்

1 mins read
bfaefd86-15ac-40e0-9906-637ff01be091
-

திருப்­ப­ரங்­குன்­றம்: மதுரை மாநகரப் போக்­கு­வ­ரத்து நெரிசலைக் குறைக்க தமி­ழக அரசு ரூ.8,500 கோடி செல­வில் மதுரை மெட்ரோ ரயில் திட்­டத்தை அறி­வித்­து உள்­ளது.

கட்­டு­மா­னப் பணி­களை அடுத்த ஆண்­டில் தொடங்கி 2027ஆம் ஆண்­டில் ரயில் சேவை­யைத் தொடங்க வியூ­கம் வகுத்­துள்ள மாநில அரசு, முதல் கட்­ட­மாக திருப்­ப­ரங்­குன்­றம், திரு­ந­கர், தனக்­கன்­கு­ளம் உள்­ளிட்ட பகு­தி­களில் அரை கிலோ மீட்­டர் இடை வெளி­யில் சாலை ஓரத்­தில் மண் பரி­சோ­தனைப் பணி­களை மேற்­கொண்டு வரு­கிறது.

ஒத்­தக்­கடை முதல் சுமார் 76 இடங்­களில் பூமி­யில் 30 அடி ஆழத்­திற்கு தோண்­டப்­பட்டு அப்­ப­கு­தி­யில் உள்ள மண்­ணின் தரம் குறித்­தும் ஆய்வு செய்ய மண்ணும் பாறை­களும் எடுக்­கப்­பட்டு வரு­கிறது.

அதில் 100க்கும் மேற்பட்ட பொறியாளர் குழுவினர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். பரிசோதனைக்காக எடுக்கப்படும் மண்ணும் பாறைகளும் ஹைதராபாத்தில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மதுரை மெட்ரோ ரயில் திட்டம், மதுரை திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை சுமார் 31 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமையும். அதில் மொத்தம் 10 ரயில் நிலையங்கள் இருக்கும்.