பொல்லாத போக்கிரி குரங்கு; 10 நாள் அட்டகாசம் முடிந்தது

1 mins read
eab52713-20d7-45d0-ba59-50e952c327f6
-

செங்­கல்­பட்டு: செங்­கல்­பட்டு அருகே மது­ராந்­த­கம், திருக்­கழுக்­குன்­றம் சாலை­யில் கடந்த 10 நாள்­க­ளாக பல­ரை­யும் துரத்­திச்சென்று தாக்கி, துன்­பு­றுத்தி வந்த ஆண் குரங்கு ஒன்று கடை­சி­யில் அதி­கா­ரி­க­ளின் வலை­யில் சிக்­கி­யது.

அந்­தக் குரங்கு வாக­னத்­தில் செல்­வோரை விரட்டி விரட்டி மிரட்டி தாக்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. (படம்)

வனத்­து­றை­யி­னர் அதைப் பிடித்து சிகிச்­சைக்­காக வண்ட­லூர் உயி­ரி­யல் பூங்­கா­வில் வைத்து இருக்­கி­றார்­கள்.

அந்­தக் குரங்கு 15க்கும் மேற்­பட்­டோரைக் கடித்து இருக்­கிறது என்­றும் அது மிரட்­டி­ய­தால் வழிப்­போக்­கர்­கள் பல­ரும் இன்­ன­மும் பீதி­யில் இருந்து மீளா­மல் இருக்­கி­றார்­கள் என்றும் சிலர் கூறி­ய­தாக ஊட­கங்­கள் தெரி­வித்­தன.