சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஜயகரிசல் குளத்தில் 2ஆம் கட்ட அகழ் ஆய்வுப் பணிகள் இம்மாதம் 6ஆம் தேதி தொடங்கின.
அதில் இதுவரை தொன்மையான 200 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
சுடுமண் புகைப்பான், கல்லால் ஆன எடைக்கல், செப்பு நாணயம், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி உள்ளிட்ட பலவும் அவற்றில் அடங்கும்.
அந்தப் பகுதியில் வாழ்ந்த தமிழர்கள், வெளிநாடுகளில் வணிகம் செய்ததற்குச் சான்றாக அந்தப் பொருள்கள் இருக்கின்றன என்று தொல்லியல் துறை இயக்குநர் தெரிவித்தார்.
ஆய்வுகள் தொடர்வதால் மேலும் தொன்மைப் பொருள்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

