புதிதாக இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி

புதிதாக இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி

2 mins read

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 74ஆக அதிகரிப்பு

சென்னை: தமி­ழ­கத்­தில் புதி­தாக இரண்டு மருத்­து­வக் கல்­லூ­ரி­களுக்கு தேசிய மருத்­துவ ஆணை­யம் அனு­மதி அளித்­துள்­ளது. இரண்­டுமே தனி­யார் மருத்­து­வக் கல்­லூ­ரி­கள் ஆகும்.

இதன் மூலம் தமி­ழ­கத்­தில் கூடு­த­லாக 350 மாண­வர்­க­ளுக்கு மருத்­து­வம் படிக்க இடம் கிடைக்­கும். தமி­ழ­கத்­தில் உள்ள மருத்­துவக் கல்­லூ­ரி­க­ளின் எண்­ணிக்கை 74ஆக அதி­க­ரிக்­கும்.

இதே­வே­ளை­யில், தமி­ழ­கத்­தில் மருத்­து­வம் படிக்­கும் மாண­வர்­களின் எண்­ணிக்­கை­யும் 11,575 ஆக உயர்­கிறது.

தேசிய மருத்­துவ ஆணை­யத்­தின் அனு­ம­தியை அடுத்து, ஈரோட்­டில் உள்ள நந்தா மருத்து­வக் கல்­லூரி, மருத்­து­வ­ம­னை­யில் 150 இடங்­க­ளு­டன் முத­லாம் ஆண்டு மருத்­து­வப் படிப்­புக்­கான சேர்க்கை தொடங்க உள்­ளது. இக்­கல்­லூரி எம்­ஜி­ஆர் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கீழ் செயல்­ப­டு­கிறது.

இதே­போல், ஈரோடு மாவட்­டத்­தில் உள்ள தன­லட்­சுமி சீனி­வா­சன் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கீழ் உள்ள மருத்­து­வக் கல்­லூ­ரி­யி­லும் எம்­பி­பி­எஸ் படிப்­புக்கு 150 இடங்­கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக மருத்­துவ ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

மேலும், சென்­னை­யில் உள்ள இஎஸ்ஐ மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் மருத்­து­வப் படிப்­புக்­கான இடங்­கள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

இதன் மூலம் தமி­ழ­கத்­தில் மேலும் 350 மாண­வர்­கள் மருத்து­வப் படிப்பை மேற்­கொள்­ளும் வாய்ப்பு அமைந்­துள்­ளது. வரும் கல்­வி­யாண்டு முதல் தேசிய மருத்­துவ ஆணை­யத்­தின் அறி­விப்பு நடை­மு­றைக்கு வரும் என தமி­ழக சுகா­தா­ரத்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

ஏற்­கெ­னவே உள்ள மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் எம்­பி­பி­எஸ் படிப்­புக்­கான இடங்­கள் அதி­க­ரிக்­கப்­ப­ட­வில்லை. மேலும், புதிய அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­களுக்­கும் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்­து­வ­மனை உட்­பட தமி­ழ­கத்­தில் 38 அரசு மருத்­து­வ­ம­னை­கள் இயங்கி வரு­கின்­றன.

ஈராண்­டு­க­ளுக்கு முன்­பு­தான் தமி­ழ­கத்­தில் புதி­தாக 11 மருத்­து­வக் கல்­லூ­ரி­கள் தொடங்­கப்­பட்­டன. மேலும், பெரம்­ப­லூர், மயி­லா­டு­துறை, திருப்­பத்­தூர், ராணிப்­பேட்டை, காஞ்­சி­பு­ரம், கள்­ளக்­கு­றிச்சி உள்­ளிட்ட ஆறு இடங்­களில் மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளைத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக தமி­ழக அரசு அறி­வித்­தி­ருந்­தது.

மேலும் அனைத்து மாவட்ட அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் புதி­தாக 250 இடங்­களை ஏற்­படுத்த நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும் என்­றும் அர­சுத்­தரப்­பில் கூறப்­பட்­டது.