அதிகரிக்கும் வழக்குகள்: கூடுதல் போக்சோ நீதிமன்றங்கள் அமைக்க ராமதாஸ் வலியுறுத்து

அதிகரிக்கும் வழக்குகள்: கூடுதல் போக்சோ நீதிமன்றங்கள் அமைக்க ராமதாஸ் வலியுறுத்து

1 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் சிறார்­களுக்கு எதி­ரான பாலி­யல் குற்­றங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தாக பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் கவலை தெரி­வித்­துள்­ளார்.

12 மாவட்­டங்­களில் மட்­டும் மூவா­யி­ரத்­துக்­கும் அதி­க­மான வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்டி உள்ள அவர், போக்சோ வழக்­கு­களை விசா­ரிக்க கூடு­தல் சிறப்பு போக்சோ நீதி­மன்­றங்­கள் வேண்­டும் என வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

ஒரு மாவட்­டத்­தில் சிறார்­களுக்கு எதி­ரான 300க்கும் மேற்­பட்ட பாலி­யல் குற்ற வழக்­கு­கள் நிலு­வை­யில் இருக்­கும் பட்­சத்­தில் அங்கு இரு சிறப்பு போக்சோ நீதி­மன்­றங்­கள் அமைக்­கப்­பட வேண்­டும் என உச்­ச­நீ­தி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­துள்­ள­தை­யும் ராம­தாஸ் தமது அறிக்­கை­யில் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

இத்­த­கைய சூழல் தமி­ழ­கத்­தில் உள்­ளது என்­றும் 12 மாவட்­டங்­களில் தலா முந்­நூற்­றுக்­கும் கூடு­த­லான வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ள­தா­க­வும் அவர் கூறி­உள்­ளார்.

"இத­னால் அக்­கு­றிப்­பிட்ட மாவட்­டங்­களில் பாதிக்­கப்­பட்ட சிறார்க­ளுக்கு நீதி வழங்­கு­வ­தில் தாம­தம் ஏற்­ப­டு­கிறது. குழந்­தை­களுக்கு எதி­ரான பாலி­யல் குற்­றங்­களில் ஈடு­பட்ட மனித மிரு­கங்­கள் உட­ன­டி­யாக தண்­டிக்­கப்­பட வேண்­டும்.

"அப்­போதுதான் குழந்­தை­களுக்கு எதி­ரான பாலி­யல் குற்­றங்­க­ளைச் செய்ய மற்­ற­வர்­கள் அஞ்­சு­வார்­கள். அந்தத் தத்­து­வத்­தின் அடிப்­ப­டை­யில்தான் வழக்கு­களை விரைந்து விசா­ரிக்க வச­தி­யாக சிறப்பு போக்சோ நீதி­மன்­றங்­கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன," என்று ராம­தாஸ் தெரி­வித்­துள்­ளார்.

இதைப் புரிந்து கொள்­ளா­மல் சி்றப்பு நீதி­மன்­றங்­களை அமைக்க தாம­திப்­பது சரி­யன்று என்­றும் இது குற்­ற­வா­ளி­கள் தப்­பிக்­க­வும் குழந்­தை­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­கள் பெரு­கு­வ­தற்­கும் காரணமாகிவிடும் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.