தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமான நிலையம் வேண்டாம்: மொட்டை அடித்து எதிர்ப்பு

1 mins read
a6612353-551f-4021-a2f3-6dd45d0c87e0
-

காஞ்­சி­பு­ரம்: பரந்­தூர் விமான நிலை­யத்­துக்கு எதிர்ப்பு தெரி­வித்து நடை­பெற்று வரும் போராட்­டங்­கள் மேலும் தீவி­ர­மடை­யும் என அப்­ப­குதி ­மக்­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் விமான நிலை­யத்­துக்­காக நிலங்­கள் கைய­கப்­ப­டுத்­தப்படு­வதை எதிர்்த்து நேற்று முன்­தி­னம் ஏக­னா­பு­ரம் கிராம மக்­கள் மொட்­டை­ய­டித்­துக் கொள்­ளும் நூதன போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

காஞ்­சி­பு­ரம் மாவட்­டத்­தில் உள்ள பரந்­தூர் பகு­தி­யில் புதிய விமான நிலை­யம் அமைக்­கப்­படும் என மத்­திய, மாநில அர­சு­கள் அறி­வித்­ததை அடுத்து, அங்கு நிலங்­க­ளைக் கைய­கப்­படுத்­தும் நட­வ­டிக்­கை­கள் தொடங்கி உள்­ளன.

விமான நிலை­யம் அமைக்­கப்­பட்­டால் தங்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரங்­கள் பாதிக்­கப்­படும் என 13 கிரா­மங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் இத்­திட்­டத்­துக்கு எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர். மேலும் பல்­வேறு போராட்­டங்­க­ளி­லும் தொடர்ந்து ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். நேற்று முன்­தி­னம் 264வது நாளாக, பாதிக்­கப்­படும் கிரா­மங்­களில் ஒன்­றான ஏக­னா­பு­ரத்­தில் மக்­கள் மொட்டை­ய­டித்து கொள்ளும் நூதனப் போராட்டடம் நடைபெற்றது.

விமான நிலை­யத்­துக்­காக பரந்­தூ­ரில் ஏறத்­தாழ 4,500 ஏக்­கர் விளை­நி­லங்­கள், நீர்­நி­லை­கள், குடி­யி­ருப்­பு­கள், பாசன கால்­வாய் உள்­ளிட்­டவை கைய­கப்­ப­டுத்­தப்­பட இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஞாயிற்­றுக்­கி­ழமை நடந்த போராட்­டத்­தின்­போது 200க்கும் மேற்­பட்­டோர் மொட்டை அடித்­துக்­கொண்­ட­னர். அப்­போது மத்­திய, மாநில அர­சு­க­ளுக்கு எதி­ரா­க பல்வேறு கண்­டன முழக்­கங்­கள் எழுப்­பப்­பட்­டன.