உளுந்தூர்பேட்டையில் ரூ.2,302 கோடி மதிப்பில் தைவானிய காலணி உற்பத்தி ஆலை

உளுந்தூர்பேட்டையில் ரூ.2,302 கோடி மதிப்பில் தைவானிய காலணி உற்பத்தி ஆலை

2 mins read
de4c0df7-9e5c-4e5a-9399-50316471fb43
-

சென்னை: தைவா­னைச் சேர்ந்த 'பௌ சென்' எனும் உல­கப் புகழ்­பெற்ற கால­ணித் தயா­ரிப்பு நிறு­வ­னம், தமிழகத்தின் உளுந்­தூர்­பேட்­டை­யில் கால­ணித் தயா­ரிப்பு ஆலை­யைத் தொடங்­க­வுள்ளது.

இதன் தொடர்­பில் அடுத்த 12 ஆண்­டு­களில் 2,302 கோடி ரூபாயை அது முத­லீடு செய்­ய இ­ருக்­கிறது.

'பௌ சென்' நிறு­வ­னம், உலகப் புகழ்­பெற்ற காலணி நிறு­வ­னங்­க­ளுக்கு ஒப்­பந்த உற்­பத்­தி­யா­ள­ராகச் செயல்படுகிறது. அந்த வகை­யில், 'பௌ சென்' குழு­மத்­தைச் சேர்ந்த 'ஹை க்ளோரி ஃபுட்வேர் இந்­தியா' நிறு­வ­னம், கால­ணி­களை உற்­பத்தி செய்­யும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டம் சிப்­காட் உளுந்­தூர்­பேட்டை தொழிற்­பூங்­கா­வில் அந்த ஆலை அமைக்­கப்­படும்.

அதன் மூலம் 20,000 பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.

காலணி உற்­பத்தி ஆலை அமைப்பதற்கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் சென்­னை­யில் உள்ள தமிழக அர­சின் தலை­மைச் செய­ல­கத்­தில் நேற்று முன்­தினம் கையெ­ழுத்­தா­னது.

முதல்­வர் மு.க.ஸ்டா­லின் முன்­னி­லை­யில், தமிழ்­நாடு அர­சாங்­க­மும் 'ஹை க்ளோரி ஃபுட்வேர் இந்­தியா' நிறு­வ­ன­மும் அந்த ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்து இட்­டன.

தொழில் வளர்ச்சி, மாநி­லம் முழு­வ­தும் பர­வ­லாக இருக்­க­வேண்­டும் என்­னும் அடிப்­ப­டை­யில் பின்­தங்­கிய மாவட்­டங்­களில் முத­லீ­டு­களை ஈர்த்­திட தமி­ழக அரசு மேற்­கொண்டு வரும் முயற்­சி­க­ளின் பல­னாய் இந்த ஒப்­பந்­தம் அமை­வ­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

புதிய காலணி உற்­பத்தி ஆலை மூல­மாக, கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டத்திலும் அதைச் சுற்­றி­உள்ள பகு­தி­களையும் சார்ந்த இளை­ஞர்­க­ளுக்கு, குறிப்­பா­கப் பெண்­க­ளுக்கு அதிக அள­வில் வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்­கெ­னவே, காலணி, தோல் பொருள்­கள் உற்­பத்­தி­யி­லும் ஏற்று­ம­தி­யி­லும் முன்­னணி மாநில­மாக விளங்கி வரும் தமிழ்­நாடு, அதன் நிலையை மேலும் வலுப்­படுத்­திக்கொள்­ள­ இந்த ஆலை உத­வும் எனக் கரு­தப்­ப­டு­கிறது.