மாமல்லபுரம்: ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி அனைத்துலக நினைவுச்சின்னங்கள், மரபுடைமைத் தலங்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள பழங்காலச் சின்னங்களை நேற்று இலவசமாகக் காண அனுமதி வழங்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும், பார்வையாளர் நேரமாகக் கடைப்பிடிக்கப்படும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுக் கட்டணம் செலுத்தாமல் மாமல்லபுரத்தில் உள்ள மரபுடைமைச் சின்னங்களை இலவசமாகக் கண்டுகளித்தனர்.

