'உட்பொருள் தகவல்களைத் தெளிவாக அச்சிட வேண்டும்'

'உட்பொருள் தகவல்களைத் தெளிவாக அச்சிட வேண்டும்'

2 mins read

பொட்டலமிட்ட உணவுப் பொருள்கள் தொடர்பில் பரிந்துரை

சென்னை: பொட்­ட­ல­மிட்ட உண­வுப் பொருள்­களில் சேர்க்­கப்­பட்டு உள்ள உட்­பொ­ருள்­க­ளின் தக­வல்­க­ளைத் தெளி­வாக அச்­சிட வேண்­டும் எனப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

பொட்­ட­ல­மிட்ட உண­வுப்­பொருள்­களில் கொழுப்­புச் சத்து, சர்க்­கரை, உப்பு போன்­ற­வற்­றின் அள­வைத் தெளி­வாக அச்­சி­டும்­படி வலி­யு­றுத்த வேண்டும் என்று தமி­ழக பொதுச் சுகா­தா­ரத்­துறை இயக்­கு­நர் டாக்­டர் செல்வ விநா­ய­கம் பரிந்­து­ரைத்து உள்­ளார்.

மாநில உண­வுப் பாது­காப்­புத் துறை ஆணை­ய­ருக்கு அனுப்­பிய கடி­தத்­தில் அவர் அவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளார்.

"பொட்­ட­ல­மி­டப்­பட்ட ஓர் உண­வுப் பொரு­ளில் கொழுப்­புச்­சத்து, சர்க்­கரை, உப்பு ஆகி­யவை அதிக அள­வில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தால் அது மக்­க­ளின் உடல்­ந­ல­னுக்கு ஊறு விளை­விக்­கும்.

"அத்­த­கைய உண­வு­க­ளால் உடற்­ப­ரு­மன், நீரி­ழிவு, இதய நோய் போன்ற பல பாதிப்­பு­கள் ஏற்­ப­டு­கின்­றன.

"இதன் தொடர்­பில் அர­சும் சுகா­தா­ரத் துறை­யும் பல்­வேறு விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டா­லும், அத்­த­கைய உண­வு­களை உட்­கொள்­வோ­ரின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்த வண்­ண­மாக உள்­ளது.

"அதைக் கருத்­தில்­கொண்டு,

பொட்­ட­ல­மி­டப்­பட்ட உண­வு­களில் சேர்க்­கப்­பட்­டி­ருக்­கும் ஊறு விளை­விக்­க­வல்ல உட்­பொ­ருள்­க­ளின் தக­வல்­களை அவற்­றின் உறை­யின்­மேல் தெளி­வாக அச்­சி­டும்­படி வலி­யு­றுத்த வேண்­டும்.

"இதற்­கான நட­வ­டிக்­கையை உண­வுப் பாது­காப்­புத் துறை மேற்­கொள்ள வேண்­டும்," என்று டாக்­டர் செல்வ விநா­ய­கம் கூறி­னார்.

"பொது­மக்­கள் எளி­தில் புரிந்து கொள்­ளும் வகை­யில் நிறக் குறி­யீ­டு­கள் மூல­மா­கவோ வேறு வகை­யான எச்­ச­ரிக்­கைக் குறி­யீ­டு­கள் மூல­மா­கவோ அத­னைக் குறிப்­பி­ட­வேண்­டும்.

"சரா­ச­ரி­யாக ஒரு நாளில் உட்­கொள்ள வேண்­டிய கொழுப்­புச்­சத்து, சர்க்­கரை, உப்பு ஆகி­ய­வற்­றின் அள­வை­யும் அதை­விட எத்­தனை மடங்கு அதி­க­மாக அந்­தப் பொட்­ட­லத்­தில் உள்ள உண­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தை­யும் அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­க­ளை­யும் அச்­ச­டித்­தல் அவ­சி­யம்," என்று தமது கடி­தத்­தில் டாக்­டர் செல்வ விநா­ய­கம் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

பொட்­ட­லங்­க­ளின் உறை­யில் ஊறு விளை­விக்­கும் பொருள்­களின் அள­வு­கள் தெளி­வாக அச்­சி­டப்­பட்­டி­ருந்­தால் அதன் அடிப்­ப­டை­யில் மக்­கள் அவற்றை வாங்­கு­வது குறித்து முடி­வெ­டுக்க ஏது­வாக இருக்­கும் என்று கரு­தப்­ப­டு­கிறது.