இதய நோய்களை முன்கூட்டி அறியும் கருவி கண்டுபிடிப்பு

இதய நோய்களை முன்கூட்டி அறியும் கருவி கண்டுபிடிப்பு

1 mins read

சென்னை: மனி­தர்­க­ளின் ரத்த நாளங்­க­ளின் ஆரோக்­கி­யத்தை எளி­தா­க­வும் நம்­ப­க­மான முறை­யி­லும் மதிப்­பீடு செய்­யும் கரு­வியை சென்னை 'ஐஐடி' எனப்­படும் இந்­தி­யத் தொழில்­நுட்­பக் கல்­விக்­க­ழக ஆய்­வா­ளர்­கள் உரு­வாக்­கி­யுள்­ள­னர்.

'ஆர்ட்­சென்ஸ்' என்று அழைக்­கப்­படும் கருவி, ரத்த நாளங்­க­ளின் ஆரோக்­கி­யத்­து­டன் வய­தை­யும் மதிப்­பிட வல்­லது எனக் கூறப்­பட்­டது.

உட­லின் உயி­ர­ணுக்­க­ளுக்கோ நரம்­பு­க­ளுக்கோ பாதிப்பு ஏற்­ப­டுத்­தாத வகை­யில் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய அக்­க­ரு­வி­யின் உத­வி­யு­டன் இதய நோய்­களை முன்­கூட்­டியே அறிந்­து­கொள்ள முடி­யும் என்­கின்­ற­னர் 'ஐஐடி' ஆய்­வா­ளர்­கள்.

'ஆர்ட்­சென்ஸ்' கரு­வியை, மருத்­து­வத் துறை­யி­னர் மட்­டு­மன்றி சாதா­ரண மனி­தர்­களும் பயன்­ப­டுத்­த­லாம்.

ஏறக்­கு­றைய 5,000க்கு மேற்­பட்­டோ­ரி­டம் அந்­தக் கரு­வி­யைப் பயன்­ப­டுத்தி ஆய்வு செய்­யப்­பட்­டது.

அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­கள், இந்­தியா ஆகி­ய­வற்­றில் பயன்­பாடு தொடர்­பான ஐந்து காப்­பு­ரி­மை­களை அந்­தத் தொழில்­நுட்­பம் பெற்­றுள்­ளது.

தொழில்­நுட்­பப் பரி­மாற்­றம், வணி­கப்­ப­டுத்­து­த­லுக்கு அந்­தக் கருவி தயார்­நி­லை­யில் இருப்­ப­தாக ஆய்­வா­ளர்­கள் கூறி­னர்.

நெதர்­லாந்­தில் உள்ள ராட்­பௌட் பல்­க­லைக்­க­ழக மருத்­துவ நிலை­யம், புது­டெல்லி எய்ம்ஸ் மருத்­து­வக் கழ­கம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த மருத்­துவ ஆய்­வா­ளர்­கள் 'ஆர்ட்­சென்ஸ்' கரு­வி­யைப் பயன்­ப­டுத்தி ரத்த நாளங்­க­ளின் வய­துக்­கும் பல்­வேறு நோய்­கள், உடல் இயக்­க­மின்மை போன்­ற­வற்­றுக்­கும் இடை­யி­லான தொடர்­பு­கள் குறித்து ஆய்­வு­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.