ரூ.200 கோடி நிதி மோசடி செய்த பெண்கள் கைது

ரூ.200 கோடி நிதி மோசடி செய்த பெண்கள் கைது

1 mins read

பெரம்­பூர்: பெரம்­பூர் பாரதி சாலை­யில் செயல்­பட்டு வந்த நிதி நிறு­வ­னம் ஒன்று, முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு 12 விழுக்­காட்டு வட்­டி­யு­டன் பணம் தரு­வ­தாக விளம்­ப­ரம் செய்­தது.

அதை நம்பி ஏரா­ள­மா­னோர் தாங்­கள் சேமித்து வைத்­தி­ருந்த பணத்தை லட்­சக்­க­ணக்­கில் அந்த நிதி நிறு­வ­னத்­தில் முத­லீடு செய்­த­னர். ஆனால் விளம்­ப­ரத்­தில் கூறி­ய­படி நிதி நிறு­வ­னம் பணத்­தைக் கொடுக்­க­வில்லை எனத் தெரி­கிறது. இது­கு­றித்து பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் காவல்­துறை­யி­டம் புகார் செய்­த­னர்.

அதன் அடிப்­ப­டை­யில் பொரு­ளி­யல் குற்­றப்­பி­ரிவு அதி­கா­ரி­கள் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்­தி­னர்.

விசா­ர­ணை­யில், கூடு­தல் பணம் தரு­வ­தாக பொது­மக்­க­ளின் முத­லீ­டு­க­ளைப் பெற்று ரூ.200 கோடி வரை மோசடி செய்­யப்­பட்­டது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

அதைத்­தொ­டர்ந்து நிதி நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர்­க­ளான வசந்தி ஈஸ்­வ­ரப்­பன், சக்தி ஐஸ்­வர்யா, ராஜம் கண்­ணன் மூவ­ரை­யும் காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர். அவர்­க­ளி­டம் விசா­ரணை தொடர்­கிறது.